Breaking

Monday, January 11, 2021

பொங்கல் பரிசு தொகுப்பை நியாய விலைக் கடைகளில் பெற்றுக்கொள்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு

பொங்கல் பரிசு தொகுப்பை நியாய விலைக் கடைகளில் பெற்றுக்கொள்வதற்கான கால அவகாத்தை வரும் 25-ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு
பொங்கல் திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடும் விதமாக அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் பயன்பெறும் வகையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் பொங்கல் ரொக்கத் தொகையை 04.01.2021 முதல் தொடங்கி 12.012021 க்குள் விநியோகம் செய்யவும் குறிப்பிட்ட நாளில் பொருட்கள் பெறாத குடும்ப அட்டைதாரர்களுக்கு 13.01.2021 அன்று வழங்கப்படவேண்டும் என பார்வை-3ல் தெரிவிக்கப்பட்டது மேலும் அரசு வழங்கி வரும் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் பொங்கல் ரொக்கத் தொகையினை குடும்ப அட்டைதாரர்களுக்கு விடுபாடின்றி வழங்க ஏதுவாக 18.01.2021 முதல் 25.01.2021 வரை (நியாயவிலைக் கடைகள் விடுமுறை நாள் தவிர ) அனைத்து நாட்களிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை விநியோகம் செய்ய வேண்டும், பொங்கல் துணிப்பை பெறாதவர்களுக்கும் பொங்கல் துணிப்பை வழங்கப்பட வேண்டும் தெரிவிக்கப்படுகிறது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog