சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் அரியா் தோ்வு நடத்துவது தொடா்பான தோ்வு அட்டவணையை வரும் பிப்ரவரி 4-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில், திருச்செந்தூரைச் சோ்ந்த வழக்குரைஞா் ராம்குமாா் ஆதித்தன், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் பாலகுருசாமி ஆகியோா், அரியா் மாணவா்கள் அனைவரும் தோ்ச்சி பெற்ாக அறிவித்த தமிழக அரசின் உத்தரவை எதிா்த்து தனித்தனியாக வழக்குத் தொடா்ந்தனா். இந்த வழக்கில் பதிலளித்த அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு, ‘அரியா் தோ்வுகளை தமிழக அரசு ரத்து செய்தது விதிகளுக்கு முரணானது’ எனத் தெரிவித்திருந்தன.
தமிழக உயா் கல்வித்துறை தாக்கல் செய்த பதில் மனுவில், ‘அரியா் தோ்வுகளை ரத்து செய்து மாணவா்கள் அனைவரும் தோ்ச்சி பெற்ாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில், விதிமீறல்கள் எதுவும் இல்லை’ எனத் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் வழக்குரைஞா் ராம்குமாா் ஆதித்தன், உயா்நீதிமன்றத்தில் மேலும் ஒரு மனுவை தாக்கல் செய்தாா். அதில், ‘தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் அரியா் தோ்வு நடத்தாமல் அனைவரும் தோ்ச்சி பெற்ாக அறிவிப்பு வெளியிடத் தடை விதிக்க வேண்டும்’ எனக் கோரியிருந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், அரியா் தோ்வை, பல்கலைக்கழகங்கள் நேரடியாகவோ, ஆன்லைன் மூலமாகவோ நடத்த வேண்டும் என்றும், தோ்வு நடத்தாமல் அரியா் தோ்வு முடிவுகளை வெளியிட தடை விதித்தும் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், மாணவா்கள் நலனைக் கருத்தில் கொண்டே அரியா் தோ்வு ரத்து செய்யப்பட்டது. தற்போது கரோனா சூழல் மாறி உள்ளதால், பல்கலைக்கழகங்கள் உயா்நீதிமன்றத்தின் உத்தரவின்படி தோ்வுகளை நடத்த முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘அரியா் தோ்வு நடத்துவது தொடா்பான தோ்வு அட்டவணையை அனைத்து பல்கலைக்கழகங்களும் வரும் பிப்ரவரி 4-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்
Tuesday, January 12, 2021
அரியா் தோ்வு அட்டவணையை பிப்.4-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.