Ph.D ஆராய்ச்சி படிப்பில் முறைகேடு நடப்பதாக வழக்கு: ஐகோர்ட் கிளை நோட்டீஸ் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, December 22, 2020

Comments:0

Ph.D ஆராய்ச்சி படிப்பில் முறைகேடு நடப்பதாக வழக்கு: ஐகோர்ட் கிளை நோட்டீஸ்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சென்னையை சேர்ந்த ஆல்பர்ட் டைட்டஸ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘பிஎச்டி ஆராய்ச்சி படிப்பிற்கு பல்கலைக்கழக மானியக்குழு நிதி வழங்குகிறது. இதனால், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி ஆராய்ச்சி படிப்பில் முறைகேடுகள் நடக்கின்றன. குறிப்பிட்ட காலத்திற்குள் பல ஆய்வு கட்டுரைகள் தாக்கலாகியுள்ளன. எனவே, தொழில்நுட்ப ரீதியாக வல்லுநர்களை நியமித்து முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்யவும், லஞ்ச ஒழிப்புத்துறையில் சிறப்புக்குழு அமைத்து விசாரிக்கவும் உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர், பல்கலைக்கழக மானியக் குழு தலைவர், லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை ஜன. 21க்கு தள்ளி வைத்தனர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews