'நீட்' தேர்வு தில்லுமுல்லு மாணவிக்கு 'சம்மன்' - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, December 23, 2020

Comments:0

'நீட்' தேர்வு தில்லுமுல்லு மாணவிக்கு 'சம்மன்'

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'நீட்' தேர்வு மதிப்பெண் சான்றிதழை போலியாக தயாரித்து, மருத்துவ கல்லுாரியில் சேர முயன்ற மாணவி மற்றும் அவரது தந்தையான டாக்டருக்கு, போலீசார் மூன்றாவது முறையாக, 'சம்மன்' அனுப்பி உள்ளனர்.
தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில், மாணவர்களை சேர்ப்பதற்கான கவுன்சிலிங், சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடந்தது. இம்மாதம், 7ம் தேதி, கவுன்சிலிங்கில் பங்கேற்ற, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த, மாணவி தீக் ஷா, 18, நீட் தேர்வு போலி மதிப்பெண் சான்றிதழை தாக்கல் செய்து, மருத்துவ கல்லுாரியில் சேர முயன்றார். இதற்கு, பல் டாக்டரான அவரது தந்தை பாலசந்திரனும் உடந்தையாக இருந்தார். இருவர் மீதும், மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர் செல்வராஜன், சென்னை பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார், மாணவி மற்றும் அவரது தந்தை மீது, மோசடி உட்பட ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, ஏற்கனவே இரண்டு முறை, 'சம்மன்' அனுப்பினர்; இருவரும் ஆஜராகவில்லை. இதனால், மூன்றாவது முறையாக நேற்று சம்மன் அனுப்பிய போலீசார், 28ம் தேதி இருவரும், பெரியமேடு காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என, தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, தனிப்படை போலீசார், பரமக்குடியில் முகாமிட்டு தலைமறைவாகி உள்ள, மாணவி மற்றும் அவரது தந்தையை கைது செய்ய முயற்சி எடுத்து வருகின்றனர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews