மருத்துவ படிப்புக்கான கவுன்சலிங் நிறைவு: அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏமாற்றம்: சீட் கிடைத்தும் சேர முடியவில்லை: கண்ணீர் மல்க திரும்பினர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, November 20, 2020

Comments:0

மருத்துவ படிப்புக்கான கவுன்சலிங் நிறைவு: அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏமாற்றம்: சீட் கிடைத்தும் சேர முடியவில்லை: கண்ணீர் மல்க திரும்பினர்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை தொடங்கியதை அடுத்து 18ம் தேதி முதல் கவுன்சலிங் தொடங்கியுள்ளது. தமிழக அரசு கொண்டு வந்துள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டு இடங்கள் (7.5%) பட்டியலில் இடம் பெற்றுள்ள மாணவர்களுக்கு முதல்கட்டமாக கவுன்சலிங் நடந்தது. இவர்களுக்காக அரசுக் கல்லூரிகளில் 227 எம்பிபிஎஸ் இடங்களும், பல் மருத்துவத்தில் 12 இடங்களும் ஒதுக்கப்பட்டு இருந்தன. மேலும் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் தொடங்கிய முதல் நாள் கவுன்சலிங்கில் 270 அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் அழைக்கப்பட்டனர். அவர்களில் 262 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். 8 பேர் வரவில்லை. மொத்தம் உள்ள 405 இடங்களில் 18ம் தேதி மட்டும் 235 இடங்களை அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் தேர்வு செய்தனர். மீதம் 170 இடங்கள் இருந்தன. இதையடுத்து நேற்றும் இன்றும் 687 மாணவ, மாணவியர் கவுன்சலிங்கில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர். நேற்றைய கவுன்சலிங்கில் பங்கேற்க வந்த அரசுப் பள்ளி மாணவர்கள் தங்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்று நம்பி வந்தனர். ஆனால் நேற்றைய கவுன்சலிங்கில் அரசுக் கல்லூரிகளில் 3 இடங்கள் மட்டுமே இருந்தன. முதலில் வந்த 3 பேர் அந்த இடங்களை தேர்வு செய்துவிட்ட நிலையில், சுயநிதி தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களான 86 சீட்டுகளை மீதம் உள்ள மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். ஆனால் அந்த மாணவர்கள் சுயநிதி கல்லூரிகளை தேர்வு செய்யாமல், வேண்டாம் என்று எழுதிக் கொடுத்தனர். இது போன்ற நிலை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் என்று தினகரன் நாளிதழ் கடந்த இரண்டு நாட்களாக சுட்டிக் காட்டி வருகிறது. அதேபோன்ற இக்கட்டான சூழ்நிலை, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நேற்று ஏற்பட்டுவிட்டது. ஏனெனில் அரசு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதாக அறிவித்ததால், அதில் வரும் 405 இடங்களும் அரசு கல்லூரியில் மாணவர்களுக்கு கிடைக்கும் என்று நம்பினர். அதில் மருத்துவக் கல்லூரியில் 313 இடங்களும், பல் மருத்துவக் கல்லூரியில் 93 இடங்களும் கிடைக்கும் என்று மாணவர்களும், பெற்றோரும் நம்பினர். ஆனால் அரசு அறிவித்த இடங்களை முழுமையாக அனுபவிக்க முடியாத நிலை அரசுப் பள்ளியில் படித்த ஏழை, எளிய மாணவர்களுக்கு ஏற்பட்டுவிட்டது பெரும்சோகத்தை ஏற்படுத்தியது. நேற்றைய நிலவரப்படி மொத்தம் 374 பேர் அழைக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் 71 பேர் வராத நிலையில் 303 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். இருப்பினும், அரசுக் கல்லூரிகளில் 3 இடங்கள் தான் இருந்தன. அதே நேரத்தில் சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 86 இருந்தன. இதனால் தான் அரசுப் பள்ளி மாணவர்கள் தனியார் கல்லூரி இடங்களை எடுக்க முடியாமல் தவித்தனர். சுயநிதி தனியார் கல்லூரிகளில் உள்ள இடங்களில் சேர்ந்தால் ஆண்டு கல்விக் கட்டணம்(அரசு நிர்ணயம் செய்தது) குறைந்த பட்சம் 3.50 லட்சம் முதல் 6 லட்சம் வரை உள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களால் அந்த தொகையை செலுத்தி படிக்க முடியாது என்பதால் பல மாணவர்கள் அந்த இடங்களை எடுக்க முடியாமல், வேண்டாம் என்று எழுதிக் கொடுத்துவிட்டு கண்ணீருடன், அழுதபடியே பெற்றோருடன் வெளியேறினர். இந்நிலையில், மருத்துவக் கல்வி இயக்ககம் நேற்று மாலை வெளியிட்ட அறிவிப்பின் படி அரசுக் கல்லூரிகளில் உள்ள 227 மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள 86 அரசு ஒதுக்கீட்டு இடங்களும் நிரம்பியதாக தெரிவித்துள்ளனர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews