அரசு பள்ளிமாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு: விவசாயிகள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, November 01, 2020

Comments:0

அரசு பள்ளிமாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு: விவசாயிகள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மருத்துப் படிப்பில் சேர்ந்து பயன்பெறும் வகையில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு செய்த தமிழக அரசுக்கும், மதுரை உயர்நீதிமன்றத்திற்கும் நன்றி தெரிவித்து செய்யாறில் விவசாயிகள் இனிப்பு வழங்கி ஞாயிற்றுக்கிழமை மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர். தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், மருத்துவப் படிப்பில் கடந்த இரு வருடங்களாக சுமார் 324 மாணவர்கள் மட்டுமே சேரும் நிலைமை இருந்து வந்தது. இந்நிலையில் மதுரை சென்னை உயர்நீதிமன்றக்கிளை மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு செய்ய அன்மையில் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு 7.5 சதவீதம் ஒதுக்கீட்டிற்கு ஆளுநர் ஒப்புதல் பெற்று அக்.29-ல் அரசாணையை பிறப்பித்தது. அதன் மூலம் அரசு பள்ளியைச் சேர்ந்த 360 மாணவர்கள் பயனடைய உள்ளனர். 7.5 சதவீதம் ஒதுக்கீட்டின் மூலம் அரசுப் பள்ளியில் பயிலும் 360 மாணவர்கள் பயன்பெறுவதற்கு தீர்ப்பு வழங்கிய மதுரை சென்னை உயர்நீதிமன்றக் கிளைக்கும், அரசாணையை பிறப்பித்த தமிழக அரசு மற்றும் தொடர் அழுத்தம் கொடுத்த கட்சிகளுக்கும் சமூக அமைப்புகளுக்கும் நன்றி தெரிவித்து திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உழவர் பேரவை சார்பில் மாவட்ட தலைவர் வாக்கடை புருஷோத்தமன் தலைமையில் விவசாயிகள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews