'நீட்' தேர்வுக்கு இந்தாண்டு விலக்கு; நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, September 03, 2020

'நீட்' தேர்வுக்கு இந்தாண்டு விலக்கு; நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
''இந்தாண்டு நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்டு, உச்ச நீதிமன்றத்தை நாடுவது தொடர்பாக, முதல்வர் நடவடிக்கை எடுப்பார்,'' என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். சென்னை, டி.எம்.எஸ்., வளாகத்தில் உள்ள, 108 ஆம்புலன்ஸ் சேவை கட்டுப்பாட்டு மையத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நேற்று ஆய்வு செய்தார். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட ஓட்டுனர்கள், மருத்துவ உதவியாளர்களை பாராட்டி, பரிசுகளை வழங்கினார்.மேலும், 108 ஆம்புலன்ஸ் வரலாற்றில், முதல் பெண் ஓட்டுனராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, தேனியை சேர்ந்த வீரலட்சுமிக்கு பாராட்டுகளை தெரிவித்து, பணி நியமன ஆணையை வழங்கினார்.
பின், அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டி: கொரோனா தொற்று உடைய, 2.15 லட்சம் பேருக்கு, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக சேவை வழங்கப்பட்டுள்ளது. மக்கள் கோரிக்கையை ஏற்று, தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனிவரும் காலங்களில், பொதுமக்கள் தொடர்ந்து விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்றாத தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பது குறித்த, பொது சுகாதார சட்டத்தில், திருத்தம் மேற்கொள்வது குறித்து, விரைவில் அறிவிக்கப்படும்.
இந்தாண்டு, நீட் தேர்வில் விலக்கு கோரி, உச்ச நீதிமன்றத்தை நாடுவது தொடர்பாக, முதல்வர் நடவடிக்கை எடுப்பார். தமிழக அரசின் உரிமையை விட்டுக் கொடுக்காமல், முதல்வர் சட்ட போராட்டங்களை நடத்தியும், அரசியல் அழுத்தத்தை கொடுத்தும் வருவது போல், இதிலும் நடவடிக்கை எடுப்பார். இவ்வாறு, அவர் கூறினார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews