ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் வெளியாகின; 24 மாணவர்கள் 100% மதிப்பெண்- தெலங்கானா முதலிடம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, September 12, 2020

ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் வெளியாகின; 24 மாணவர்கள் 100% மதிப்பெண்- தெலங்கானா முதலிடம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups

இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்த ஜேஇஇ முதன்மைத் தேர்வின் முடிவில், 24 மாணாக்கர்கள் 100 சதவீத மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.

மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர்வதற்கு, கடந்த ஜனவரி மாதத்திலும் அதைத் தொடர்ந்து, இம்மாதம் 1ம் தேதி தொடங்கி 6ம் தேதி வரையிலும் ஜேஇஇ முதன்மைத் தேர்வு நடைபெற்றது.

CLICK HERE FOR RESULT DIRECT LINK பொறியியல் நுழைவுத் தேர்வுக்கான ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் நேற்று நள்ளிரவில் வெளியாகின. இதில் 24 மாணவர்கள் 100% மதிப்பெண் பெற்றுள்ளனர். கரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தேர்வுகளைத் தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தபோதும் திட்டமிட்டபடி ஜேஇஇ தேர்வுகள் செப்டம்பர் 1-ம் தேதி தொடங்கி, 6-ம் தேதி முடிவடைந்தன. தேர்வுக்கு 8.58 லட்சம் மாணவர்கள் பதிவு செய்தனர். இதில் 6.35 லட்சம் மாணவர் தேர்வில் கலந்துகொண்டனர். அதாவது 2.2 லட்சம் மாணவர்கள் (சுமார் 25% பேர்) தேர்வெழுதவில்லை. இந்நிலையில், ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் நேற்று நள்ளிரவில் வெளியாகின. இதில் 24 மாணவர்கள் 100% மதிப்பெண் பெற்றுள்ளனர். தெலங்கானா மாநிலத்தில் 8 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். டெல்லியில் 5 பேர், ராஜஸ்தானில் 4 மாணவர்கள், ஆந்திராவில் மூவர், ஹரியாணாவில் 2 பேர், குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் தலா ஒரு மாணவர் 100% மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். தேர்வர்கள் jeemain.nta.nic.in என்ற இணைய முகவரியை க்ளிக் செய்து தங்களின் விண்ணப்ப எண், கடவுச்சொல் மூலம் தங்களின் தேர்வு முடிவுகளை அறிய முடியும். ஜேஇஇ மெயின் தாள் 1 மற்றும் தாள் 2-ல் முதல் 2.45 லட்சம் இடங்களைப் பிடிக்கும் மாணவர்கள் ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வை எழுதத் தகுதி பெற்றவர்கள் ஆவர், இத்தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம் ஐஐடிக்களில் மாணவர்கள் படிக்க முடியும். ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வு செப்டம்பர் 27-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அந்த தேர்வு முடிவில், தெலங்கானாவில் 8 பேர், டெல்லியில் 5 பேர் உள்ளிட்ட 24 பேர் முழு மதிப்பெண்களை பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வுப் பட்டியலில் முதல் 2 லட்சத்து 45 ஆயிரம் இடங்களுக்குள் இடம்பெற்றவர்கள் மட்டுமே, ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வை எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

CLICK HERE FOR RESULT DIRECT LINK 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews