'ஆன்லைன்' வகுப்பு தொடரும் செங்கோட்டையன் தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, September 11, 2020

'ஆன்லைன்' வகுப்பு தொடரும் செங்கோட்டையன் தகவல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
''மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' வகுப்புகள் முன்பு போலவே தொடர்ந்து நடக்கும்,'' என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு மாவட்டம், நம்பியூரில், அவர் அளித்த பேட்டி:செப்டம்பர் இறுதி வரை, பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய கல்வி கொள்கை குறித்து, அதற்கென அமைக்கப்பட்டுள்ள குழு மூலம் ஆய்வு செய்து, நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழகத்தின் நிலைப்பாடு, இரு மொழி கொள்கை தான்.
மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவே, செப்., 21 முதல், ஐந்து நாட்களுக்கு, ஆன்லைன் வகுப்புகள் நடத்தக்கூடாது என, உத்தரவிடப் பட்டுள்ளது. வழக்கமாக இந்த சமயத்தில், காலாண்டு விடுமுறை நாட்களாக இருக்கும். அதனால், ஐந்து நாட்கள் மட்டும் தளர்வு செய்யப் பட்டு உள்ளது. அதன்பின், மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் முன் போலவே தொடர்ந்து நடக்கும். அரசு மற்றும் நிதியுதவி பள்ளிகளில், ஆங்கில வழிக்கல்வி போதிக்க வசதியாக, பாடத்திட்டம் தயாரிக்கும் பணி நடக்கிறது. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து, இதுவரை எந்த முடிவும் மேற்கொள்ளப்படவில்லை. முதல்வரிடம் கலந்து பேசியே, முடிவு செய்யப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews