பள்ளிக்கல்வி - 2020 - 2021ஆம் கல்வியாண்டில் கொரானா தீநுண்மி பரவல் காரணமாக பொது முடக்கம் - இணைய வழி வகுப்புகள் நடத்துதல் - ஒரு வார காலம் 21.09.2020 முதல் 25.09.2020 வரை இணைய வழி வகுப்புகள் நிறுத்தி வைக்கக் கோருதல் - தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அரசு கடித(டி) எண்.127 நாள் 16.09.2020 - PDF - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 16, 2020

Comments:0

பள்ளிக்கல்வி - 2020 - 2021ஆம் கல்வியாண்டில் கொரானா தீநுண்மி பரவல் காரணமாக பொது முடக்கம் - இணைய வழி வகுப்புகள் நடத்துதல் - ஒரு வார காலம் 21.09.2020 முதல் 25.09.2020 வரை இணைய வழி வகுப்புகள் நிறுத்தி வைக்கக் கோருதல் - தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அரசு கடித(டி) எண்.127 நாள் 16.09.2020 - PDF

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பள்ளிக் கல்வித் துறை, தலைமைச் செயலகம், சென்னை -600 009.
அரசு கடித(டி) எண்.127, பள்ளிக்கல்வித் துறை, நாள் 16.09.2020
அனுப்புநர் திரு.தீரஜ் குமார், இ.ஆ.ப.,

அரசு முதன்மைச் செயலாளர்.
பெறுநர்
மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர், சென்னை -6.
ஐயா,
பொருள்: பள்ளிக்கல்வி - 2020 - 2021ஆம் கல்வியாண்டில் கொரானா தீநுண்மி பரவல் காரணமாக பொது முடக்கம் - இணைய வழி வகுப்புகள் நடத்துதல் - ஒரு வார காலம் 21.09.2020 முதல் 25.09.2020 வரை இணைய வழி வகுப்புகள் நிறுத்தி வைக்கக் கோருதல் - தொடர்பாக. பார்வை : தங்களது கடிதம் ந.க.எண்.1401/01/2020, நாள் 15.09.2020.
பார்வையில் காணும் கடிதத்தில், கொரானா தீநுண்மி பரவல் காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு 25.03.2020 முதல் பள்ளிகள் மூடப்பட்டு, நாளது தேதிவரை திறக்கப்படவில்லை என்றும், மாணாக்கர்களுக்கு கற்றல் கற்பித்தல் பணி பாதிப்படையக் கூடாது என்பதால், 2020-2021ஆம் கல்வி ஆண்டிற்கான பாடங்களை இணைய வழியாக நடத்துவதற்கு அரசாணை (நிலை) எண்.65, கல்வித்துறை, நாள் 29.07.2020ல் விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும், பள்ளி மாணாக்கர்கள் தொடர்ந்து இணைய வழி வகுப்புகள் மூலம் கல்வி பயின்று வருகின்றனர் என்றும், ஒவ்வொரு கல்வியாண்டிலும், செப்டம்பர் மாதம் நான்காவது வாரம் காலாண்டுத் தேர்வு விடுமுறை விடப்படும் என்றும், இது சம்பந்தமாக மாண்புமிகு பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்களின் செய்தி வெளியீட்டில், “21.09.2020 முதல் 25.09.2020 வரை இணைய வழி வகுப்புகள் நடைபெறாது'' என செய்தி வெளியிட்டுள்ளார்கள் என்றும், அதன்படி 2020-2021-ம் கல்வியாண்டில், 21.09.2020 முதல் 25.09.2020 வரை ஐந்து நாட்களுக்கு அனைத்து வகைப் பள்ளிகளிலும் இணைய வழி வகுப்புகள் எடுப்பதை நிறுத்தி வைக்கலாம் என்றும், இது தொடர்பாக உரிய ஆணை வழங்குமாறு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
2. மேற்காணும் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரின் கருத்துருவை ஏற்று, 2020-2021-ம் கல்வியாண்டில், அனைத்து வகைப் பள்ளிகளிலும் 21.09.2020 முதல் 25.09.2020 வரை ஐந்து நாட்களுக்கு இணைய வழி வகுப்புகள் எடுப்பதை நிறுத்தி வைத்து அரசு ஆணையிடுகிறது. CLICK HERE TO DOWNLOAD PDF 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews