ஆன்லைன் வகுப்பு விதிமுறைகளை மீறும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை - தமிழ்நாடு அரசு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 01, 2020

ஆன்லைன் வகுப்பு விதிமுறைகளை மீறும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை - தமிழ்நாடு அரசு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழ்நாடு பள்ளிக்கூட மாணவர்களின் கல்விக்கான, ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகளை மீறும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளது. பள்ளிக்கூடங்களில் ஆன்லைன் வகுப்புகள் குறித்த வழிகாட்டு விதிமுறைகள் எவ்வாறு பின்பற்றப்படுகிறது என்பது குறித்தும், மலைப்பகுதி மாணவர்களுக்கு எப்படி கல்வி வழங்கப் போகிறார்கள் என்பது குறித்தும் விளக்கமளிக்க வேண்டும் என்பது குறித்தும் அறிக்கை அளிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை கோரியும், விதிகளை வகுக்க கோரியும் தொடரப்பட்ட வழக்குகள், நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு வழக்கறிஞர், விதிமுறைகளை மீறும் பள்ளிகளுக்கு எதிராக புகார்கள் வந்தால் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். மலைவாழ் மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி மூலம் கல்வி பெறலாம் என்றும் அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வகுப்புகளுக்கு செல்லும் மாணவர்கள் ஆபாச இணையதளங்களுக்குள் நுழைய முடியாதபடி, இணையதளங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள், தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews