அண்ணா பல்கலை.யில் தேர்வுக்கட்டணம் செலுத்தாதவர்களின் ரிசல்ட் நிறுத்தி வைப்பு!: மாணவர்கள் அதிர்ச்சி..!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 17, 2020

Comments:0

அண்ணா பல்கலை.யில் தேர்வுக்கட்டணம் செலுத்தாதவர்களின் ரிசல்ட் நிறுத்தி வைப்பு!: மாணவர்கள் அதிர்ச்சி..!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வுக்கட்டணம் செலுத்தாத மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், அண்ணா பல்கலைக் கழக உறுப்பு கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் இறுதியாண்டு தவிர்த்த மற்ற மாணவர்களுக்கு தேர்வு முடிவு ஆன்லைனில் வெளியாகியுள்ளது. இதில் பல மாணவர்களின் பதிவு எண்ணை உள்ளீடு செய்தால் தேர்வு கட்டணம் கட்டாததற்கான குறியீடே பதிலாக கிடைத்துள்ளது. இதனால் லட்சக்கணக்கான பொறியியல் மாணவர்கள் தங்களது தேர்வு முடிவை தெரிந்துக்கொள்ள முடியாமல் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து, தேர்வு கட்டணம் செலுத்தாததை காரணம் காட்டி தேர்வு முடிவை நிறுத்தி வைப்பதை பல்வேறு தரப்பினரும் கண்டித்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் தேர்வு கட்டணமாக சுமார் 100 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலிக்கும் அண்ணா பல்கலைக் கழகம் தற்போது எழுதாத தேர்வுக்கு ஏன் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது அவர்களின் கேள்வியாக உள்ளது. கொரோனா ஊரடங்கால் தேர்வு கட்டணத்தை செலுத்த இயலாமல் மாணவர்கள் பலர் அவதிப்பட்டு வருவதால் அதனை செலுத்துமாறு அண்ணா பல்கலைக் கழகம் நிர்பந்திக்கக்கூடாது என்று பொறியியல் கல்லூரிகளின் கூட்டமைப்பு வலியுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews