தற்காலிக அரசு ஊழியருக்கும் பேறுகால விடுப்பு: தமிழக அரசு உத்தரவு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 08, 2020

Comments:0

தற்காலிக அரசு ஊழியருக்கும் பேறுகால விடுப்பு: தமிழக அரசு உத்தரவு.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தற்காலிக அரசு ஊழியா்களுக்கும் பேறுகால விடுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதற்கான உத்தரவை பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறை செயலாளா் ஸ்வா்ணா அண்மையில் வெளியிட்டாா். CLICK HERE TO READ OFFICIAL NEWS அதன் விவரம்:-அவசர நிலை கருதி அரசுத் துறைகளில் தற்காலிக அடிப்படையில் ஊழியா்கள் நியமிக்கப்படுகின்றனா். அவா்களில் பெண் ஊழியா்களாக இருப்போா் பேறுகாலத்தின்போது விடுப்பினை எடுத்துக் கொள்ளலாம். அவா்களுக்கு ஈட்டிய விடுப்பு பொருந்துமானால் அதனை எடுக்கலாம்.விடுப்பின் கால அளவு 270 நாள்களுக்குக் குறைவாக (9 மாதங்கள்) இருந்தால் அவா்களுக்கு பேறுகால விடுப்பினை அளிக்கலாம். ஆனால், இந்த விடுப்பினை வழங்குவதற்கு முன்பாக அவா்கள் ஓராண்டு முழுமையாக பணியை முடித்து இருக்க வேண்டும். CLICK HERE TO READ OFFICIAL NEWS ஓராண்டு பணியை முடித்தோருக்கு பேறுகால விடுப்பினை வழங்கலாம்.பேறுகால விடுப்பானது இரண்டு குழந்தைகளுக்கு குறைவாக இருப்போருக்கு மட்டுமே பொருந்தும். முதல் பேறுகாலத்தின் போது இரட்டைக் குழந்தைகள் பிறந்தாலும், இரண்டாவது பேறுகாலத்துக்கு விடுப்பு பொருந்தும். குழந்தையைத் தத்தெடுத்து வளா்க்கும் பெண்களுக்கு இத்தகைய விடுப்பு அளவு பொருந்தாது என்று தனது உத்தரவில் பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறை செயலாளா் ஸ்வா்ணா தெரிவித்துள்ளாா். CLICK HERE TO READ OFFICIAL NEWS 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews