Breaking

Sunday, July 26, 2020

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்காததால் பிளஸ் டூ மாணவர்கள் அதிருப்தி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படாததால் மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு மற்றும் பிளஸ் 1 அரியர் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பள்ளிகளில் ஜூலை 24 (நேற்று) முதல் வழங்கப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்திருந்தது. ஆனால், சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் உள்ளபள்ளிகளில் சான்றிதழ் தரப்படாமல் மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து பிளஸ் 2 மாணவர்கள் சிலர் கூறியதாவது: சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளில்இணையதள கோளாறு, தலைமை ஆசிரியர் ஆய்வுக்கூட்டத்துக்கு சென்றுள்ளார் என பல காரணங்களைக் கூறி மதிப்பெண் சான்றிதழ் தரப்படவில்லை. மேலும், மறுகூட்டல் விண்ணப்பப் பதிவுக்கு மட்டுமே தற்போதுமுக்கியத்துவம் வழங்கப்படுவதாகவும், மதிப்பெண் சான்றிதழை ஜூலை 27-ம் தேதி முதல் பெற்றுக் கொள்ளவும் என்றும் பள்ளிகள் தரப்பில் கூறப்பட்டது. அதேபோல், ஒரு சில பள்ளிகளில் மாணவர்களே இணையதளத்தில் இருந்து சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொண்டு, கையொப்பத்தை மட்டும் நேரில்பெற்றுக் கொள்ள தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். உயர்கல்விக்கான சேர்க்கை தொடங்கிவிட்ட நிலையில் அரசுப் பள்ளிகள் மதிப்பெண் சான்றிதழ் விவகாரத்தில் அலட்சியம் காட்டுவது வருத்தமளிக்கிறது. கரோனாவைரஸ் பரவல் சூழலில் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படாததகவலையாவது முன்கூட்டியேதெரிவித்து, மாணவர்கள் நேரில் வருவதை தடுத்திருக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog