STFI - ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளைத் திரும்பப் பெறக்கோரி ஆகஸ்ட்-5 ல் மாநிலம் முழுவதும் போராட்டம் அறிவிப்பு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 22, 2020

Comments:0

STFI - ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளைத் திரும்பப் பெறக்கோரி ஆகஸ்ட்-5 ல் மாநிலம் முழுவதும் போராட்டம் அறிவிப்பு.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளைத் திரும்பப் பெறக்கோரி ஆகஸ்ட் 5 ல் மாநிலம் முழுவதும் போராட்டம் இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு . இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநிலக் குழுக் கூட்டம் 21.07.2020 அன்று மாநில ஒருங்கிணைப்பாளர் ச.மயில் தலைமையில் காணொளி வழியே நடைபெற்றது.
கூட்டத்திற்கு அகில இந்தியத் துணைத்தலைவர் K. ராஜேந்திரன் , அகில இந்தியச் செயலாளர் K.P.0 . சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு உயர்நிலை , மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் பொதுச்செயலாளர் S. சேது செல்வம் வரவேற்புரை ஆற்றினார் . கூட்டத்தில் கடந்த 2019 ஜனவரியில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற 6500 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் மீது தமிழக அரசு மேற்கொண்ட குற்றவியல் நடவடிக்கைகள் மற்றும் தமிழ்நாடு குடிமைப்பணி ( ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு ) விதி 17 ( ஆ ) நடவடிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளைத் திரும்பப் பெறக்கோரி ஆகஸ்ட்-5 ல் மாநிலம் முழுவதும் போராட்டம்- இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் (STFI)21.07.2020 மாநிலக்குழு முடிவு-ஊடகச் செய்தி மற்றும் தீர்மானங்கள்
PDF வடிவில் Download here... 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews