ஒத்திவைக்கப்பட்டு இருந்த மே மாத பட்டய கணக்காளர் தேர்வு ரத்து செய்யப்படுவதாக இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் அறிவித்துள்ளது.
பட்டய கணக்காளர் தேர்வு (சி.ஏ.) ஒவ்வொரு ஆண்டும் மே மற்றும் நவம்பர் மாதங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான மே மாத பட்டய கணக்காளர் தேர்வு கொரோனா ஊரடங்கு காரணமாக நடத்தப்படாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. அதற்கான தேர்வு எப்போது நடைபெறும் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், அந்த தேர்வு ரத்து செய்யப்படுவதாக இந்தியாவின் பட்டய கணக்காளர்கள் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
இதுகுறித்து இந்தியாவின் பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தின் கூடுதல் செயலாளர் (தேர்வு) எஸ்.கே.கார்க் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கொரோனா நோய்த்தொற்றின் தீவிரம் ஜூன் மாதத்தின் பிற்பகுதியில் இருந்து குறைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் மீண்டும் அதிகமாகிவிட்டது. அதேபோல், மத்திய உள்துறை அமைச்சகம், ஊரடங்கு வழிகாட்டுதல்களை ஜூலை 31-ந்தேதி வரை நீட்டித்தது. தேர்வுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்த அந்தந்த மாநிலங்களின் பள்ளி, கல்வி நிறுவனங்களில் தேர்வுகள் நடத்துவதற்கு அவர்களால் வளாகத்தை வழங்க முடியவில்லை.
இந்த காரணங்களாலும், தேர்வு எழுத இருந்த மாணவர்களின் நலன் மற்றும் அவர்களுடைய நல்வாழ்வை உறுதிசெய்யும் வகையிலும் 2020-ம் ஆண்டு மே மாதம் நடத்தப்பட இருந்த பட்டய கணக்காளர் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. இந்த தேர்வை வருகிற நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் தேர்வுகளுடன் ஒன்றிணைக்கவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
இதுதொடர்பான முறையான அறிவிப்பு www.ic-ai.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
CA தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஐசிஏஐ அறிவித்துள்ளது. இந்திய முழுவதும் கொரோனா அதிக அளவில் பரவி வருவதால் அனைத்து விதமான தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு வருகிறது. சில முக்கியம் வாய்ந்த தேர்வுகள் மட்டும் ரத்து செய்யாமல் ஒத்திவைக்கப்படுகிறது. தேர்வுகளை ரத்து செய்வதோ அல்லது ஒத்திவைப்பதோ அந்த அந்த மாநில அரசுகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் கையில் உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பலவிதமான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டும், ரத்து செய்தும் உள்ளது. மேலும் ஆண்டு தோறும் இருமுறை CA தேர்வை இந்தியப் பட்டயக் கணக்காளர்களுக்கான நிறுவனம் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு மே மாதம் நடைபெற இருந்த தேர்வு கொரோனா ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதனையடுத்து இந்த தேர்வு ஜூலை 29-ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஜூலை இறுதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், தேர்வை ரத்து செய்வதாக ஐசிஏஐ அறிவித்துள்ளது.
CA தேர்வு எழுத இந்திய முழுவதும் உள்ள மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் நவம்பர் மாதம் நடைபெறும் தேர்வுடன் சேர்த்து எழுதிக் கொள்ளலாம் என ஐசிஏஐ கூறியுள்ளது. மேலும் இந்த தேர்வு தொடர்பான கூடுதல் விவரங்களைத் மாணவர்கள் www.icai.org என்கிற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர். மே மாதம் நடத்தத் திட்டமிட்டு இருந்த CA தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.