கொரோனா தடுப்புப்பணி - ஆசிரியர்கள் அச்சம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 04, 2020

Comments:0

கொரோனா தடுப்புப்பணி - ஆசிரியர்கள் அச்சம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
வன விலங்கு நடமாட்டமுள்ள பகுதிகளில், கொரோனா தடுப்பு பணியில், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, புகார் எழுந்துள்ளது.கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் பணிகளில், ஆசிரியர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காரமடை, அன்னுார் ஒன்றியங்களில், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், சோதனை சாவடிகளில் வரும் வாகனங்களை, கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.குறிப்பிட்ட ஆசிரியர்களுக்கு மட்டும், இப்பணிகளை சுழற்சி முறையில் வழங்குவதாகவும், வன விலங்கு நடமாட்டமுள்ள பகுதிகளில், இரவுப்பணி தொடர்ச்சியாக வழங்கப்படுவதாகவும், புகார் எழுந்துள்ளது.தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் தங்கபாசு கூறுகையில், 'காரமடை ஒன்றியத்தில், 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்தும், குறிப்பிட்ட, 33 ஆசிரியர்களுக்கே தொடர்ச்சியாக, சோதனை சாவடி கண்காணிப்பு பணி வழங்கப்படுகிறது. முக கவசம், கையுறை எதுவுமே வழங்காததோடு, அமர கூட இடமில்லாத சூழல் நிலவுகிறது.வனவிலங்கு நடமாட்டம் உள்ள பகுதிகளில், ஆசிரியர்களை பணியில் ஈடுபடுத்துவதால் அச்சப்படுகின்றனர். சுழற்சி முறையில் அனைத்து ஆசிரியர்களுக்கும் இப்பணிகளை ஒதுக்கலாம். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட, ஆசிரியர்கள் தயாராக உள்ளோம். சில தளர்வுகள் வழங்காமல், இப்பணியில் ஈடுபட கட்டாயப்படுத்துவதால், சிக்கல் நீடிக்கிறது,'' என்றார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews