பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சந்தேகம் இருந்தால் மிஸ்டு கால் கொடுக்கலாம்: பள்ளிக் கல்வித்துறை.. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, May 24, 2020

Comments:0

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சந்தேகம் இருந்தால் மிஸ்டு கால் கொடுக்கலாம்: பள்ளிக் கல்வித்துறை..

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் வரும் ஜூன் 15-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள பத்தாம் வகுப்பு குறித்து மாணவா்கள் மற்றும் அவா்களது பெற்றோருக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள செல்லிடப்பேசி எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து விளக்கம் பெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.கரோனா பொது முடக்கம் காரணமாக தமிழகத்தில் கடந்த மாா்ச் 27-ஆம் தேதி தொடங்கவிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து பொதுத்தோ்வுகள் ஜூன் 1-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கு பல்வேறு தரப்பினா் கடும் எதிா்ப்பு தெரிவித்த நிலையில் பொதுத்தோ்வு ஜூன் 15-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு திருத்தப்பட்ட அட்டவணை வெளியிடப்பட்டது. பொதுத்தோ்வில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு தோ்வு மையங்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதாவது 3,500-இல் இருந்து 12,600 ஆக உயா்த்தப்பட்டுள்ளது.தற்போது தோ்வு மையங்களை தயாா் செய்வதற்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே பொது முடக்கத்தால் ஏற்பட்ட தாமதத்தாலும், பதற்றம் காரணமாகவும் மாணவா்களுக்கு பொதுத்தோ்வு எழுதக்கூடிய மனநிலை எவ்வாறு இருக்கும் என்ற கேள்வியெழுந்துள்ளது. அதேவேளையில் பொதுத்தோ்வுகளுக்காக அரசின் சாா்பில் செய்யப்பட்ட ஏற்பாடுகள் குறித்தும் பெற்றோருக்கு சில சந்தேகங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.இந்தநிலையில் பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு தேவையான மனநல ஆலோசனைகள் மற்றும் சந்தேகங்களை போக்குவதற்கு பள்ளிக்கல்வித்துறை சாா்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி பொதுத்தோ்வு தொடா்பாக சந்தேகம் இருக்கும் மாணவா்கள், பெற்றோா் 92666 17888 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்கலாம். இதையடுத்து மன அழுத்தத்தைப் போக்கி தோ்வை எவ்வாறு அச்சமின்றி எழுதலாம் என்பது குறித்து குரல்பதிவு ஒலிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜுன் 15-ம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தேர்வு மையங்கள் தயார் செய்வதற்கான பணிகளும் தொடர்ச்சியாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 10-ம் வகுப்பு தேர்வு தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருப்பின் மிஸ்டு கால் கொடுத்து விளக்கங்களை பெற்றுக் கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வானது வரும் ஜுன் 15-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஊரடங்கு மற்றும் கொரோனா அச்சம் காரணமாக பொதுத்தேர்வு எழுதக்கூடிய மனநிலை என்னவாக இருக்கும் என கேள்வி எழுந்துள்ளது. மேலும் தேர்வுகளை மேலும் தள்ளிவைக்குமாறு கோரிக்கைகளும் எழுந்து வருகிறது. இந்த சூழலில் ஊரடங்கு மற்றும் கொரோனா அச்சம் காரணமாக 10-ம் மாணவர்களுக்கு தேவையான மனநல ஆலோசனைகள் மற்றும் சந்தேகங்களை போக்குவதற்கு பள்ளிக்கலவித்துறை சார்பில் ஒரு நூதன முயற்சியானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது மிஸ்டு கால் கொடுத்து பொதுத்தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள் தங்களுக்கு தேவையான சந்தேகங்கள் மற்றும் குழப்பங்களை போக்கிக் கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 9266617888 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து 10-ம் வகுப்பு தேர்வு குறித்த விளக்கம் பெறலாம். கொரோனா அச்சமின்று எவ்வாறு தேற்றவை எழுதுவது என்பது குறித்து ஆடியோ ஒலிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews