ஓய்வுபெற்ற பேராசிரியர்களுக்கு மீண்டும் பணி? உயர்கல்வி துறை முதன்மை செயலாளர் விளக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, May 24, 2020

Comments:0

ஓய்வுபெற்ற பேராசிரியர்களுக்கு மீண்டும் பணி? உயர்கல்வி துறை முதன்மை செயலாளர் விளக்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள இடங்களில் ஓய்வு பெற்ற பேராசிரியர்களை மீண்டும் பணி அமர்த்தக்கூடாது என்று உயர்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. உயர்கல்வித் துறை உத்தரவு தமிழகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள் தங்களின் பணிக்காலம் முடிந்ததும், கெளரவ விரிவுரையாளர்கள், தற்காலிக விரிவுரையாளர்கள் என்று பல்வேறு பொறுப்புகளில் நியமிக்கப்படுவது வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது. பல்கலைக்கழகங்களின் விருப்பத்தின் பேரில் கெளரவ விரிவுரையாளர்களாக ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டு வரும்நிலையில், வரும் கல்வி ஆண்டு முதல் ஓய்வு பெற்ற பேராசிரியர்களை மீண்டும் பணியமர்த்த தடைவிதித்து, உயர்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக உயர்கல்வி துறை முதன்மை செயலாளர் அபூர்வா, உயர்கல்வி துறையின் கீழ் உள்ள பல்கலைக்கழகங்களின் பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- பணி அமர்த்தக்கூடாது பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள கற்பித்தல் பதவிகளில் ஓய்வு பெற்ற பேராசிரியர்களை மீண்டும் பணியமர்த்த சில பல்கலைக்கழகங்கள் முடிவு செய்து இருக்கின்றன. இது தகுதியான இளைஞர்களின் வேலைவாய்ப்புகளுக்கு இடையூறாக இருக்கும். எனவே, பல்கலைக்கழகங்கள் காலியாக உள்ள கற்பித்தல் பதவிகளில் ஓய்வுபெற்ற பேராசிரியர்களை மீண்டும் பணி அமர்த்தக்கூடாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் ஓய்வுபெற்ற பேராசிரியர்களை ஆலோசகர்களாக நியமித்ததற்கு, பல்வேறு பேராசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழக உயா்கல்வித்துறையின்கீழ் செயல்படும் பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் பேராசிரியா்களின் பணிக்காலம் முடிந்ததும் கெளரவ விரிவுரையாளா்கள் உள்பட பல்வேறு பொறுப்புகளில் நியமிக்கப்படுவது வழக்கமான நடைமுறையாக இருந்துவருகிறது. இந்நிலையில் வரும் கல்வியாண்டு முதல் ஓய்வு பெற்ற பேராசிரியா்களை மீள் பணியமா்த்த தடை விதிக்கப்பட்டுள்ளது.ஓய்வு பெற்ற பேராசிரியா்களை தோ்வுக்கான கேள்வித்தாள் தயாரித்தல், கற்பித்தல் பணியில் அல்லது பாடத்திட்டம் வகுத்தல், பாடப்புத்தகம் தயாரிக்கும் பணி ஆகியவற்றில் பல்கலைக் கழகங்கள் அல்லது கல்லூரி நிா்வாகங்கள் சோ்த்துக் கொள்வது வழக்கம். இதன்படி பணியில் சேரும் ஓய்வு பெற்ற பேராசிரியா்களுக்கு மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை வழங்கப்படும். இது தவிர அவா்கள் சாா்ந்துள்ள பல்கலைக் கழகம், அல்லது கல்லூரிகளில் வழங்கப்படும் சலுகைகளையும் பெற முடியும். இதனால் இது போன்ற பணிக்கு ஒவ்வொரு ஆண்டும் அதிக அளவில் பேராசிரியா்கள் விண்ணப்பிப்பது வழக்கம். இதனால், பல்கலைக் கழகம் மற்றும் அதை சோ்ந்து உறுப்பு கல்லூரிகளுக்கும் செலவு குறைவாகிறது. இதை கணக்கில் கொண்டு நிா்வாகத்தரப்பில் ஓய்வு பெற்ற பேராசிரியா்களையும் நியமித்து வருகின்றன. இது நிா்வாகத்துக்கு லாபமாக இருந்தாலும், பல படித்த பட்டதாரி இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பை பறிப்பதாக இருந்து வந்தது.இதற்கிடையே இது குறித்து பட்டத்தாரிகள் தரப்பிலும் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் ஓய்வு பெற்றவா்களை நியமிக்கும் நடவடிக்கை தொடா்ந்தது. இந்தநிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு அரசு நிதித்துறையின் சாா்பில் வெளியிடப்பட்ட அரசாணையின் அடிப்படையில் புதியதாக எந்த பணி நியமனங்களும் செய்யக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் உயா்கல்வித்துறையின் சாா்பில் தற்போது அவசர ஆணை ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உயா்கல்வித்துறை முதன்மைச் செயலா் அபூா்வா, அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பியுள்ளசுற்றறிக்கையில், ‘தற்போது காலியாக உள்ள பேராசிரியா் பணியிடங்களில் ஓய்வு பெற்றவா்களை மீண்டும் பணியமா்த்த சில பல்கலை.கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இந்த செயல்பாடுகள் படித்து பட்டம் பெற்ற இளைஞா்களின் வேலைவாய்ப்புக்கு தடையாக இருக்கும். எனவே, அனைத்து பல்கலை.களும் ஓய்வு பெற்ற பேராசிரியா்களை காலியாக உள்ள கற்பித்தல் பணியிடங்களில் நியமிக்கக்கூடாது’ என கூறப்பட்டுள்ளது பல்கலைக் கழகங்களின் உறுப்பு கல்லூரிகளில் ஓய்வு பெற்ற பேராசிரியர்களை பதவிகளில் நியமிக்க கூடாது என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் இயங்கும் 16க்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள் தங்கள் பணிக்காலம் முடிந்ததும் ஓய்வு பெறுவார்கள். பணிக்காலத்தில் அவர்களுக்கு லட்சத்தில் சம்பளம் கிடைக்கும். இந்நிலையில் அந்த பணியில் இருந்து ஓய்வு பெற்றதும், வீட்டில் இருக்க பிடிக்காமல் மீண்டும் பல்கலைக் கழகம் அல்லது பல்கலைக் கழக உறுப்பு கல்லூரிகளில் மீண்டும் சேர்ந்து பணியாற்ற விரும்புவதாக விருப்ப கடிதம் கொடுத்து சேர்வது வழக்கம். இவர்கள் கெஸ்ட் லக்சர், இன்வைட்டிங் லச்சர் அடிப்படையில் பணியில் அமர்த்தப்படுகின்றனர். தேர்வுக்கான கேள்வித்தாள் தயாரித்தல், கற்பித்தல் பணியில் அல்லது பாடத்திட்டம் வகுத்தல், பாடப்புத்தகம் தயாரிக்கும் பணி ஆகியவற்றில் இவர்களை பல்கலைக் கழகங்கள் அல்லது கல்லூரி நிர்வாகங்கள் சேர்த்துக் கொள்வது வழக்கம். இது ஆண்டாண்டு காலமாக நடந்து வரும் செயல்.
இதன்படி பணியில் சேரும் ஓய்வு பெற்ற பேராசிரியர்களுக்கு மாத ஊதியமாக 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை வழங்கப்படும். இது தவிர அவர் சேர்ந்துள்ள பல்கலைக் கழகம், அல்லது கல்லூரிகளில் வழங்கப்படும் சலுகைகளும் அவர்களுக்கு கிடைக்கும். இதனால் இது போன்ற பணிக்கு ஒவ்வொரு ஆண்டும் அதிக அளவில் பேராசிரியர்கள் விண்ணப்பிப்பது வழக்கம். இதனால், பல்கலைக் கழகம் மற்றும் அதை சேர்ந்து உறுப்பு கல்லூரிகளுக்கும் செலவு குறைவாகிறது. இதை கணக்கில் கொண்டு நிர்வாகத்தரப்பில் ஓய்வு பெற்ற பேராசிரியர்களையும் நியமித்து வருகின்றன. இது நிர்வாகத்துக்கு லாபமாக இருந்தாலும், பல படித்த பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பறிப்பதாக இருந்து வந்தது. இதற்கிடையே இது குறித்து பட்டத்தாரிகள் தரப்பிலும் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் ஓய்வு பெற்றவர்களை நியமிப்பது நிற்கவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் அரசு நிதித்துறையின் சார்பில் வெளியிடப்பட்ட அரசாணையின் அடிப்படையில் புதியதாக எந்த பணி நியமனங்களும் செய்யக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் உயர்கல்வித்துறையின் சார்பில் நேற்று அவசர ஆணை ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் அனுப்பியுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: சில பல்கலைக் கழகங்களில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களில் ஓய்வு பெற்ற பேராசிரியர்களை மீண்டும் பணியமர்த்தப் போவதாக தெரியவந்துள்ளது. இது போன்ற செயல்கள், படித்து பட்டம் பெற்றுள்ள தகுதியான இளைஞர்களின் வேலை வாய்ப்புக்கு தடையாக இருக்கும். இதையடுத்து, அனைத்து பல்கலைக் கழகங்களும் ஓய்வு பெற்ற பேராசிரியர்களை காலியாக உள்ள கற்பித்தல் பணியிடங்களில் நியமிக்க கூடாது என்று அரசு தெரிவிக்கிறது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews