12ம் வகுப்புக்கு பிறகு: B.Sc Computer Science படித்தால் எவ்வளவு சம்பளம், என்ன வேலை கிடைக்கும்? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, April 03, 2020

Comments:0

12ம் வகுப்புக்கு பிறகு: B.Sc Computer Science படித்தால் எவ்வளவு சம்பளம், என்ன வேலை கிடைக்கும்?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
B.Sc Computer Science Scope:
12 ஆம் வகுப்பு முடித்த பின்பு பிஎஸ்இ கம்ப்யூட்டர் சைன்ஸ் துறையை தேர்வு செய்யலாமா? அந்த துறையில் வேலைவாய்ப்புகள், சம்பளம் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது பற்றி விரிவாக இங்கு பார்க்கலாம்.
12 ஆம் வகுப்பு முடித்து விட்டு பிஎஸ்இ கம்ப்யூட்டர் சைன்ஸ் துறையை தேர்வு செய்யலாமா? அதில் வேலைவாய்ப்புகள், சம்பளம் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது பற்றி விரிவாக இங்கு பார்க்கலாம்.
பிஎஸ்சி கம்ப்யூட்டர் சைன்ஸ் என்பது மூன்றாண்டு பட்டப்படிப்பாகும். பன்னிரண்டாம் வகுப்பில் பயோலாஜி, கம்ப்யூட்டர் சைன்ஸ் எந்த பிரிவில் படித்திருந்தாலும், இந்த படிப்பில் சேரலாம். தற்போது பெரும்பாலான நிறுவனங்கள் அனைத்தும் கணினி மையமாக மாறியுள்ளது. இதன் பிறகும் எதிர்காலத்தில் தொழில்நுட்பத்தின் தேவையே மிகுதியாக இருக்கும். ஆனால், அதற்கு ஏற்றவாறு டிகிரி முடித்த பின்பு, மேற்படிப்பும் படித்தால் நன்றாக இருக்கும்.
வேலைவாய்ப்புகள்:
பிஎஸ்சி கம்ப்யூட்டர் சைன்ஸ் படித்தால், பல்தரப்பட்ட துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது. அரசு, அரசு சார்ந்த நிறுவனங்களிலும், தனியார் துறைகளிலும், கல்வி நிறுவனங்களிலும் பணிபுரியலாம். பள்ளிகளில் கணினி ஆசிரியராக பணியாற்றலாம். இன்போசிஸ், டிசிஎஸ், ஆரகிள், ஐபிஎம், விப்ரோ உள்ளிட்ட தனியார் நிறுவனங்களில் வேலை பெற முடியும்.
இதே போல் வெப் டிசைன், சாப்டவேர் டிசைன், சாப்ட்வேர் டெஸ்டர், , டெக்னிக்கல் சூப்ரவைசர், கன்சல்டன்சி, சிஸ்டம் மெயின்டனன்ஸ், எலெக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் பெற முடியும். ஆனால், தற்போது இன்ஜினியரிங் முடித்தவர்களும் இத்தகைய பணிகளுக்கு விண்ணப்பிக்க தொடங்கி விட்டனர். எனவே, டிகிரியோடு சேர்ந்து, ஏதேனும் ஒரு துறையில் டிப்ளமோ படிப்போ, முதுநிலை படிப்போ படிக்கலாம்.
பிஎஸ்சி கம்ப்யூட்டர் சைன்ஸ் முடித்த பின்பு என்ன படிக்கலாம்?
மூன்று ஆண்டுகள் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சைன்ஸ் படித்த பிறகு மேற்படிப்பு படிக்க விரும்புவர்களுக்கு பல துறைகள் உள்ளது. MBA, MCA, MBA டெலிகம்யூனிகேஷன் மேனேஜ்மென்ட், ரோபோட்டிக் கோர்ஸ், டேட்டா பேஸ் அட்மின், MCM (Master in Computer Management), MSC IT, ஹார்ட்வேர் கோர்ஸ், 3டி அனிமேஷன், வெப் டெவலப்மென்ட், வெப் சாப்ட்வேர் இன்ஜினியரிங் என பல்வேறு துறைகள் உள்ளது.
பிஎஸ்சி கம்ப்யூட்டர் சைன்ஸ் முடித்த பிறகு, கம்ப்யூட்டர் அல்லாத வேறு துறைகளிலும் முதுநிலை படிப்பில் சேர முடியும். அதாவது கிராஸ் மேஜர் ஆகும். இதழியியல், தொடர்பியல், காட்சி தொடர்பியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சேருவதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதுமானது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews