அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் ஊதியம் மே மாதம் வழங்க கோரிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, April 18, 2020

Comments:0

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் ஊதியம் மே மாதம் வழங்க கோரிக்கை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களின் ஊதியத்தை மே மாத முதல் வாரத்தில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவுரவ விரிவுரையாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். தமிழ்நாடு அனைத்து அரசு கல்லூரி யுஜிசி தகுதி கவுரவ விரிவுரையாளர்கள் சங்கத்தின் சார்பில் தமிழக முதல்வருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் தற்போது 105 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் கடைசியாக இணைக்கப்பட்ட 14 உறுப்பு கல்லூரிகளுக்கு இன்னும் பல்கலைக் கழகம்தான் ஊதியம் வழங்கி வருகின்றன. புதியதாக அரசுக் கல்லூரிகளாக அறிவிக்கப்பட்ட 14 கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் இன்னும் தொகுப்பு ஊதியமாக மாற்றப்படவில்லை.
அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்டாலும் இன்னும் அரசு வழங்காமல் உள்ளது. இந்த கவுரவ விரிவுரையாளர்கள் தாங்கள் பணியாற்றும் நாட்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்குவதால், சராசரியாக ஆண்டுக்கு 9 மாதங்கள் மட்டுமே முழுமையான ஊதியம் கிடைக்கிறது. இந்நிலையில், மீதமுள்ள 27 பல்கலைக் கழக உறுப்பு கல்லூரிகளையும் அரசுக் கல்லூரிகளாக மாற்ற அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க மீதம் உள்ள 91 அரசுக் கலைக் கல்லூரிகளில் சுமார் 4048 பேர் கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இதில் சுழற்சி 1ல் 2423 பேரும், சுழற்சி 2ல் 1661 பேரும் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாத ஊதியமாக 15 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கல்வியாண்டிலும் ஜூன் முதல் ஏப்ரல் வரை பணியாற்றுகிறார்கள். ஆனால், 11 மாதங்கள் மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது.
ஜூன் முதல் மார்ச் வரை உள்ள 10 மாதத்துக்குக்கான ஊதியம் மட்டும் அந்தந்த கல்வி ஆண்டிலேயே வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் ஒவ்ெவாரு ஆண்டும் (நிதியாண்டு மார்ச் மாதத்தில் முடிவடைவதால்) ஏப்ரல் மாதத்தின் ஊதியத் தொகையை மட்டும் அடுத்த கல்வி ஆண்டின் தொடக்கத்தில் நிதி ஒதுக்கப்பட்டு 4 மாதங்களுக்கு பிறகு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் பெறுவது வழக்கம். தற்போது கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களின் ஏப்ரல் மாத ஊதியத்தை மே மாத தொடக்கத்திலேயே வழங்க வேண்டும். மேலும் மே மாதத்துக்கான ஊதியத்தை இந்த ஆண்டே வழங்க வேண்டும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews