10, 12 வகுப்புகளுக்கு தேர்வு கட்டாயம் நடத்தப்படும் - CBSE - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 29, 2020

Comments:0

10, 12 வகுப்புகளுக்கு தேர்வு கட்டாயம் நடத்தப்படும் - CBSE

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பொது ஊரடங்கு முடிந்தபின் 10 மற்றும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்வு நடப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பே தேர்வு அட்டவணை வெளியிடப்படும். 10,12-ம் வகுப்பு தேர்வை ரத்து செய்யக்கோரி டெல்லி துணை முதல்வர் மணீஷ்சிசோடியா கோரிய நிலையில் சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்ட பின்னர் 10,12-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு. தேர்வுக்கு 10 நாட்களுக்கு முன் அட்டவணை வெளியிடப்படும்.
கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது . இதனால் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன . 10 மற்றும் 12 ஆம் வகுப்பு உட்பட சில தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன . இதனிடையே , தமிழகத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது . மேலும் 10 வகுப்பு பொதுத்தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. ஆனால் தேர்வுகள் கண்டிப்பாக நடக்கும் என முதலமைச்சர் உறுதியாக தெரிவித்தார் . மேலும் , எப்போது பள்ளிகளைத் திறக்கலாம் என்பது கொடர்பாக ஒரு குழு அமைத்து , ஆய்வு மேற்கொண்ட பின்னர் அறிவிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். இந்நிலையில் , பொது முடக்கம் முடிந்த பின் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கட்டாயம் நடக்கும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது . போதிய கால அவகாசம் இருப்பதால் தேர்வுகளை ரத்து செய்யும் திட்டம் இல்லை எனவும் தெரிவித்துள்ளது .
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews