கொரோனாவால் முதலில் பாதிக்கப்பட்ட பெண்ணா இவர்? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, March 30, 2020

Comments:0

கொரோனாவால் முதலில் பாதிக்கப்பட்ட பெண்ணா இவர்?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
உலகம் முழுவதும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கரோனா வைரஸ் காரணமாக இதுவரை கிட்டதட்ட 30 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 6 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சீனாவில் முதன்முதலில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நபர் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
சீனாவின் வூஹான் நகரில் உள்ள ஹூனான் சந்தையில் இறால் விற்ற 57 வயது மதிக்கத்தக்க பெண்ணே, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நபர் என தகவல்கள் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கோர முகத்தை காட்டி வரும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. சுமார் 7.2 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா தொற்றால் முதன்முதலில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் வெய் குய்சியன் என்றும், ஒரு மாத சிகிச்சைக்கு பின் ஜனவரியில் அப்பெண் முழுமையாக குணமடைந்துள்ளார் என அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜெர்னல், மிர்ரர் யூ.கே உள்ளிட்ட நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டிச.10ம் தேதி சாதாரண சளியால் பாதிக்கப்பட்ட அப்பெண், அருகில் உள்ள கிளினிக்கிற்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தொடர்ந்து உடல்நலக்குறைவு ஏற்படவே வூஹானில் உள்ள யூனியன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். தனக்கு தாங்க முடியாத அளவுக்கு வலி இருப்பதாக குய்சியன் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து அவரை போன்ற அறிகுறியுடன் ஹூனான் சந்தையில் இருந்து பலர் வந்துள்ளனர்.
ஹூனான் இறைச்சி சந்தையில் உள்ள பொது கழிப்பறையை பயன்படுத்தியதால் தான் தனக்கு கொரோனா தொற்று பரவியதாக அப்பெண் கூறியுள்ளார். அவருடன் நெருங்கிய தொடர்புள்ள பலருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் விரைந்து செயல்பட்டு இருந்தால் உயிரிழப்பை குறைத்து இருக்க முடியுமெனவும் வெய் குய்சியன் தெரிவித்துள்ளார். முன்னதாக டிசம்பர். 1ம் தேதி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட முதல் நபர் கண்டறியப்பட்டதாக லான்செட் மருத்துவ இதழ் தெரிவித்திருந்தது.
கரோனா பாதித்த முதல் நபர் சீனாவில் உள்ள வுஹான் நகரில் இயங்கி வரும் மிகப்பெரிய கடல் உணவுகள் சந்தையில் இறால் விற்பனை செய்து வந்த பெண் ஒருவருக்கு தான் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல், தி பேப்பர், மிரர் யு.கே உள்ளிட்ட நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளன. வுஹானில் கடல் உணவு சந்தையில் இறால் விற்பனை செய்து வந்த வெய் கியுசியான் என்ற 57 வயதான பெண் சளி மற்றும் காய்ச்சலால்wei பாதிக்கப்பட்டுள்ளார்.
அதன்பின் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனாலும் நோய் குணமாகவில்லை. இதே அறிகுறிகளுடன் பலர் வுஹான் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சென்றுள்ளனர். அதன்பின் நிலைமை மிகவும் மோசமானது அனைவரும் அறிந்ததே. வெய் சிகிச்சைக்குப் பின் இப்போது குணமாகியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள வுஹான் நகராட்சி சுகாதார ஆணையர் வெளியிட்ட அறிவிப்பில், வுஹானில் முதன்முதலில் கரோனா உறுதியான 27 பேரில் வெய் கியுசியான் என்பரும் ஒருவர் என தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews