திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவுத் துறையில் வேலை வாய்ப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, February 03, 2020

Comments:0

திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவுத் துறையில் வேலை வாய்ப்பு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு சங்க நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் 30 பணியிடங்கள் உள்ள நிலையில் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிர்வாகம் :
திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு சங்கம்
மொத்த காலிப் பணியிடம் : 30
காலிப் பணியிட விபரங்கள்:
பொது - 9,
பிற்படுத்தப்பட்டோர் - 8,
பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்) - 1,
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / சீர் மரபினர் - 6,
ஆதிதிராவிடர் - 5,
ஆதிதிராவிடர் (அருந்ததியர்) - 1
கல்வித் தகுதி :
மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பும், கூட்டுறவு பயிற்சியும் முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். முன்னாள் ராணுவத்தினர் 48 வயதுக்கு உட்பட்டவராகவும், மாற்றுத்திறனாளிகள் 40 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) மற்றும் இவ்வகுப்புகளைச் சார்ந்த முன்னாள் இராணுவத்தினர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள், அனைத்து இனத்தைச் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு வயது வரம்பு இல்லை.
முக்கிய நாட்கள்:
அறிவிப்பு வெளியான நாள் : 3 பிப்ரவரி 2020
விண்ணப்பம் தொடங்கிய நாள் : 3 பிப்ரவரி 2020
விண்ணப்பம் முடியும் நாள் : 2 மார்ச் 2020
தேர்வு நடைபெறும் நாள் : 5 ஏப்ரல் 2020
மேற்கண்ட பணியில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.tvldrb.in என்னும் இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று, அதனை பூர்த்தி செய்து மார்ச் 2-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :
ரூ.250 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
ஏற்கனவே, கடந்த 26.8.2019 முதல் 30.9.2019 வரையில் திருவள்ளூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பைத் தொடர்ந்து விண்ணப்பக் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தவர்கள், மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆனால், விண்ணப்பிக்கக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
அதற்கு பதிலாக ஏற்கனவே செலுத்திய விண்ணப்பக்கட்டண இரசீது எண்ணை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews