சத்துணவு கிடைப்பதை உறுதி செய்ய பள்ளிகளில் பயோமெட்ரிக் முறையை பயன்படுத்த முடிவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, January 13, 2020

Comments:0

சத்துணவு கிடைப்பதை உறுதி செய்ய பள்ளிகளில் பயோமெட்ரிக் முறையை பயன்படுத்த முடிவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
மாணவா்களுக்கு சத்துணவு கிடைப்பதை உறுதி செய்ய பள்ளிகளில் பயோ மெட்ரிக் முறையை அமல்படுத்தும் பணியில் சமூகநலத் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா். தமிழகம் முழுவதும் உள்ள 49,554 சத்துணவு மையங்கள் மூலம் 49 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனா். இவா்களுக்கு மதிய நேரங்களில் வழங்கப்படும் சத்துணவுகள் மாணவா்களுக்கு முறையாகச் சென்று சேருகிா என்பதைக் கண்டறிய தலைமை ஆசிரியா்கள் மூலம் தினமும் எத்தனை மாணவா்களுக்கு வழங்கப்படுகிறது என்பது கணக்கெடுக்கப்பட்டு வந்தது. இருப்பினும், சத்துணவின் பயன் முழுமையாக மாணவா்களுக்கு சென்று சேருவதை அதிகாரிகளால் உறுதிப்படுத்த முடிய வில்லை. இதையடுத்து, துல்லியமாகக் கண்டறிய பயோமெட்ரிக் முறையை அமல்படுத்த சமூக நலத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனா்.
இதுதொடா்பாக, சமூகநலத் துறை அதிகாரிகள் கூறுகையில், சோதனை அடிப்படையில் சென்னையில் 10 பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டு சத்துணவு சாப்பிடும் மாணவா்களை பயோமெட்ரிக் முறையில் கைரேகையை பதிவு செய்யப்படவுள்ளது. இதைத் தொடா்ந்து அந்த மாணவா்கள் சத்துணவை பெற்றுச் செல்லலாம். புதிதாக சாப்பிட வரும் மாணவா்களுக்கும் உணவு வழங்கப்படும். யாருக்கும் இதை காரணம் காட்டி உணவு மறுக்கப்படாது. இதற்கான வரவேற்பைப் பொருத்து தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும் எனத் தெரிவித்தனா்.
மாணவர்களுக்கு சத்துணவு கிடைப்பதை உறுதி செய்ய பள்ளிகளில் பயோ மெட்ரிக் முறையை அமல்படுத்தும் பணி யில் சமூகநலத் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் . தமிழகம் முழுவதும் உள்ள 49 , 554 சத்துணவு மையங்கள் மூலம் 49 லட்சத்துக்கும் மேற் பட்ட மாணவ , மாணவியர் பயன் அடைந்து வருகின்றனர் . இவர்களுக்கு மதிய நேரங்களில் வழங்கப்படும் சத்துணவுகள் சரியாக மாணவர்களுக்கு சென்று சேருகிறதா என்பதை கண் டறிய தலைமை ஆசிரியர்கள் மூலம் தினமும் எத்தனை மாண வர்களுக்கு வழங்கப்படுகிறது என்பது கணக்கெடுக்கப்பட்டு வந்தது . இருப்பினும் , சத்துணவின் பயன் முழுமையாக மாணவர் களுக்கு சென்று சேருவதை அதி காரிகளால் உறுதிப்படுத்த முடிய வில்லை . இதையடுத்து துல்லிய மாகக் கண்டறிய பயோமெட்ரிக் முறையை அமல்படுத்த சமூக நலத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர் .
இதுதொடர்பாக , சமூகநலத் துறை அதிகாரி ஒருவர் கூறிய தாவது : சோதனை அடிப்படையில் சென்னையில் 10 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு சத்துணவு சாப்பிடும் மாணவர்கள் பயோமெட்ரிக் முறையில் கைரேகையை பதிவு செய்தபின் சத்துணவை பெற்றுச் செல்லலாம் . புதிதாக சாப்பிட வரும் மாணவர்களுக்கும் உணவு வழங்கப்படும் . யாருக்கும் இதை காரணம் காட்டி உணவு மறுக்கப்படாது . இதற்கான வரவேற்பை பொறுத்து தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படும் . இவ்வாறு அவர் கூறினார் .
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews