ரூ.1.77 லட்சம் சம்பளத்தில் தமிழக அரசு வேலை: புதிய அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, January 23, 2020

Comments:0

ரூ.1.77 லட்சம் சம்பளத்தில் தமிழக அரசு வேலை: புதிய அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தமிழக அரசுத் துறையில் காலியாக உள்ள உதவி ஆணையர், மாவட்ட அதிகாரி, உதவி இயக்குநர், துணை பதிவாளர் உள்ளிட்ட 69 பணியிடங்களை நிரப்பிடுவதற்கான புதிய அறிவிப்பை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அரசு வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெறவும்.
மொத்த காலியிடங்கள்: 69
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: துணை ஆட்சியாளர் - 18
பணி: துணை கண்காணிப்பாளர் (காவல்துறை) - 19
பணி: உதவி ஆணையாளர் (வணிக வரி) - 10
பணி: துணை பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) - 14,
பணி: உதவி இயக்குநர் (கிராமப்புற வளர்ச்சி) - 07
பணி: மாவட்ட அதிகாரி (தீ மற்றும் மீட்பு சேவைகள்) - 01

சம்பளம்: மாதம் 56,000 - 1,77,500 வழங்கப்படும்.
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதி மாறுபடுகிறது. வணிகவியல் அல்லது சட்டத்துறையில் பட்டம் பெற்றவர்கள், சமூகவியல் துறையில் முதுகலை பட்டம், டிப்ளமோ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். உடற்தகுதி குறித்த தகவல்களை அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வயது வரம்பு:
01.07.2020 தேதயின்படி, உதவி ஆணையாளர், மாவட்ட அதிகாரி, உதவி இயக்குநர், துணை பதிவாளர், துணை கண்காணிப்பாளர், துணை ஆட்சியாளர் உள்ளிட்ட அனைத்துப் பணியிடங்களுக்குமே 21 முதல் 37க்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். வயதுவரம்பில் சலுகைகோருவோர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தேர்வு செய்யப்படும் முறை:
முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் வாய்வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வுக்கட்டணம்:
புதிதாக விண்ணப்பிப்போர் தேர்வுக்கட்டணமாக ரூ.150, ஒரு முறை பதிவுக்கட்டணமாக 150 ரூபாய் செலுத்த வேண்டும். முதல்நிலைத் தேர்வு கட்டணமாக ரூ.100, முதன்மைத் தேர்வு கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் அல்லது நேரடியாக வங்கியின் மூலமாகச் செலுத்தலாம். ஏற்கெனவே, ஒரு முறை பதிவுக்கட்டணம் செலுத்தி பதிவு செய்திருப்பவர்கள் தேர்வுக்கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
முதல்நிலை எழுத்துத் தேர்வு தமிழகத்தின் அரியலூர், சென்னை, சிதம்பரம், கோவை, தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், காரைக்குடி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நாகர்கோவில், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், நீலகிரி, தேனி, திருவள்ளூர், திருவண்ணமாலை, திருவாரூர், தூத்துக்கு, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருப்பூர், விழுப்புரம், வேலூர்,விருதுநகர் என 32 மாவட்டங்களில் நடைபெறும். முதன்மைத் தேர்வு சென்னையில் மட்டுமே நடத்தப்படும்.
தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 21.02.2020
எழுத்துத் தேர்வுகள் நடைபெறும் தேதி: உத்தேசமாக 05.04.2020 என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.02.2020
மேலும் முழுமையான விபரங்கள் அறிய விரும்புவோர்
www.tnpsc.gov.in அல்லது http://tnpsc.gov.in/Notifications/2020_01_NOTIFYN_GR_I_SERVICES.pdf .
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews