IAS/IPS ரிசல்ட் 10ம் தேதி வெளியீடு: ஜனவரி முதல் வாரத்தில் நேர்காணல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, December 08, 2019

Comments:0

IAS/IPS ரிசல்ட் 10ம் தேதி வெளியீடு: ஜனவரி முதல் வாரத்தில் நேர்காணல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட சிவில் பணிக்கான மெயின் தேர்வு ரிசல்ட் 10ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான ேதர்வுகளை நடத்துகிறது. இந்த ஆண்டு சிவில் சர்வீஸ் பணியில் அடங்கிய 896 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி 19ம் தேதி அறிவித்தது. இத்தேர்வுக்கு சுமார் 11 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 5 லட்சத்து 50 ஆயிரம் பேர் முதல்நிலை தேர்வு எழுதுவதற்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கான முதல் நிலை தேர்வு கடந்த ஜூன் 2ம் தேதி நடந்தது. தொடர்ந்து ஜூலை 12ம் தேதி முதல் நிலை தேர்வுக்கான ரிசல்ட் வெளியிடப்பட்டது. இத்தேர்வில் இந்தியா முழுவதும் 11,845 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தை பொறுத்தவரை 610 பேர் வரை தேர்ச்சி பெற்றனர்.
இந்த நிலையில் மெயின் தேர்வு கடந்த செப் 20ம் தேதி தொடங்கி 5 நாட்கள் நடந்தது. அதாவது, செப்டம்பர் 20ம் தேதி முதல் தாள் தேர்வு(கட்டுரை வடிவிலானது), 21ம் தேதி காலை இரண்டாம் தாள்(பொது அறிவு 1), மதியம் மூன்றாம் தாள்(பொது அறிவு 2) தேர்வும், 22ம் தேதி காலை 4ம் தாள்(பொதுஅறிவு 3), மதியம் 5ம் தாள் தேர்வு(பொது அறிவு4), 28ம் தேதி காலை இந்திய ெமாழிகளில் ஒரு தாள் தேர்வு, மதியம் ஆங்கிலம் தேர்வும், 29ம் தேதி காலை விருப்பப்பாடம் முதல் தாள் தேர்வும், மதியம் விருப்பப்பாடம் இரண்டாம் தாள் தேர்வும் நடந்தது. நாடு முழுவதும் 24 நகரங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னையில் 2 இடங்களில் மட்டும் நடந்தது. இந்த நிலையில் மெயின் தேர்வுக்கான ரிசல்ட் திங்கட்கிழமை வெளியாகலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.இது குறித்து சங்கர் ஐ.ஏ.எஸ். அகடாமி நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி கூறியதாவது: ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட சிவீல் பணிக்கான மெயின் தேர்வு 5 நாட்கள் நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்கான ரிசல்ட் வருகிற 10ம் தேதியில் இருந்து 14ம் தேதிக்குள் வெளியாக அதிக வாய்ப்பு உள்ளது. மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அடுத்தக்கட்டமாக நேர்முக ேதர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முக தேர்வு ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறும். இறுதி தேர்வு முடிவு ஏப்ரலில் முதல்வாரத்தில் வெளியாகும்.இவ்வாறு அவர் கூறினார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews