துணியிலிருந்து மின்சாரம் தயாரிப்பு : ஐஐடி மாணவர்கள் அசத்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, November 04, 2019

Comments:0

துணியிலிருந்து மின்சாரம் தயாரிப்பு : ஐஐடி மாணவர்கள் அசத்தல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
திறந்த வெளியில் உலர்த்தப்படும் துணிகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை மேற்குவங்கத்தின் காரக்புர் ஐஐடி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த தொழில்நுட்பம் குறித்து ஐஐடி பேராசிரியர் சுமன் சக்ரவர்த்தி கூறுகையில், துணிகள் செல்லுலோஸ் பைபர்களால் ஆனது. அவற்றின் சுவர்களில் மின் அணுக்கள் இருக்கும். சிறிய அளவிலான துணியை உப்பு கரைசலில் நீங்கள் மூழ்க வைத்தால், அதில் உள்ள பைபர் மற்றும் அயனியாக்க துகள்களால் அந்த துணி மிதக்கும். அவை தொடர்ந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும். இதை மின் சேமிப்பானுடன் இணைக்கும் போது சிறிய அளவில் மின்சாரத்தை சேமிக்க முடியும்.
சலவை தொழிலாளிகள் துணியை உலர்த்தும் முறையை கொண்டு இந்த தொழில்நுட்பத்தை நாங்கள் உருவாக்கினோம். இந்த மின்சாரம் பெரிய அளவிலான பயன்பாட்டிற்கு போதுமானதாக இருக்காது. ஆனால் கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மாற்ற நிச்சயம் போதுமானதாக இருக்கும் என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews