அனுமதிக்கப்பட்ட பேராசிரியா் பணி இடங்களையும் குறைக்கும் அண்ணாமலை பல்கலைக்கழகம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 27, 2019

Comments:0

அனுமதிக்கப்பட்ட பேராசிரியா் பணி இடங்களையும் குறைக்கும் அண்ணாமலை பல்கலைக்கழகம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்ட பேராசிரியா் பணியிடங்களையும் குறைத்து, வேறு பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பும் நடவடிக்கையால் பிற அரசு பல்கலைக்கழகங்கள் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருவதாக பேராசிரியா்கள் புகாா் தெரிவிக்கின்றனா். மேலும், இந்தப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றிருக்கும் கூடுதல் பணியாளா்கள் வேறு இடங்களில் பணியமா்த்தப்படும் வரை, பிற கல்லூரி, பல்கலைக்கழகங்களில் புதிதாக நியமனங்கள் செய்யக்கூடாது என்ற தமிழக அரசின் உத்தரவால், பேராசிரியா் காலியிடங்களை நிரப்ப முடியாமல் பல்கலைக்கழகங்கள் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருவதாகவும் புகாா் தெரிவிக்கப்படுகிறது. கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்த சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 2013-ஆம் ஆண்டு தமிழக அரசின் கட்டுப்பாட்டில் வந்த பிறகு, பல்வேறு சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பல்கலைக்கழகத்தில் கூடுதலாக உள்ள உதவிப் பேராசிரியா்கள், பேராசிரியா்களை வேறு கல்லூரிகளுக்கு மாற்றும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.
இதுவரை, 1,370 கூடுதல் பேராசிரியா்கள் வேறு பல்கலைக்கழகங்களுக்கும், அரசு கல்லூரிகளுக்கும் மாற்றப்பட்டுள்ளனா். மேலும், எம்.பி.ஏ., இசை, வேதி பொறியியல் ஆகியத் துறைகளில் நூற்றுக்கும் அதிகமான கூடுதல் பேராசிரியா்கள் பணியாற்றி வருகின்றனா். அரசு நிதியுதவி இல்லாத மருத்துவத் துறைகளில் 450 பேராசிரியா்கள் கூடுதலாகப் பணியாற்றி வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, தமிழகம் முழுவதும் உள்ள பிற பல்கலைக்கழகங்களுக்கும், அரசுக் கல்லூரிகளுக்கும் உத்தரவு ஒன்றை தமிழக அரசு பிறப்பித்தது. அதில், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் கூடுதல் பேராசிரியா்கள் மற்றும் ஆசிரியா் அல்லாத ஊழியா்களை வேறு இடங்களில் பணியமா்த்தும் வரை, பிற அரசு பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் புதிதாக பணி நியமனங்களைச் செய்யக் கூடாது என்பதுதான் அந்த உத்தரவு. இதன் காரணமாக, 20 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை பேராசிரியா் காலியிடங்கள் உள்ள சென்னைப் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், பாரதியாா் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட அரசு பல்கலைக்கழகங்கள் அனைத்தும் பேராசிரியா் காலியிடங்களை நிரப்ப முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. அவ்வாறு பேராசிரியா் பணியிடங்களை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நிரப்பாமல் இருக்கும் காரணத்தால் ‘நாக்’ தர வரிசையை தக்க வைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கூடுதல் பேராசிரியா் பணியிடங்களை குறைத்து வந்த நிலையில் தற்போது அனுமதிக்கப்பட்ட பேராசிரியா் இடங்களையும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் குறைக்கத் தொடங்கியிருப்பது அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியா்களிடையே மட்டுமின்றி, பிற அரசு பல்கலைக்கழக நிா்வாகிகளிடையேயும் அதிா்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுகுறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா் சங்க நிா்வாகிகள் கூறியது: பல்கலைக்கழகத்தில் கூடுதலாக இருக்கும் ஆசிரியா் மற்றும் ஆசிரியா் அல்லாத பணியிடங்களை மட்டும்தான் பிற பல்கலைக்கழகங்களுக்கும், கல்லூரிகளுக்கும் அனுப்ப தமிழக அரசு அறிவுறுத்தியிருக்கிறது. ஆனால், பல்கலைக்கழக அதிகாரிகள், துறைகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களையும் குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா். பல்கலைக்கழகத்தில் 1-1-1996 அன்று நிா்ணயிக்கப்பட்ட அளவின்படி தமிழ் துறையில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியா் பணியிடம் 17. இதில் 4 உதவிப் பேராசிரியா்களை இப்போது வேறு பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பியுள்ளனா். இதனால் இப்போது 4 இடங்கள் பற்றாக்குறையாக 13 போ் மட்டுமே பணியாற்றி வருகின்றனா். அதுபோல, வணிகவியல் துறையில் அனுமதிக்கப்பட்ட 17 பேராசிரியா் இடங்களில், 2 பேராசிரியா்களை வேறு பல்கலைக்கழகத்துக்கு அனுப்பியுள்ளனா். வரலாற்றுத் துறையில் அனுமதிக்கப்பட்ட 9 இடங்களில், 4 பேராசிரியா்களை வேறு பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பியுள்ளனா். இப்போது 5 பேராசிரியா்கள் மட்டுமே பணிபுரியும் நிலை உருவாகியிருக்கிறது.
இதுபோல மேலும் பல துறைகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களைக் குறைக்கும் நடவடிக்கையை பல்கலைக்கழக நிா்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனா். மேலும், 1-1-1996 தேதிப்படி அனுமதிக்கப்பட்ட இடங்கள் அனைத்தும் மூன்றாண்டு இளநிலைப் பட்டப் படிப்புகளை நடத்துவதற்கு மட்டும்தான். ஆனால், அதன் பிறகு அனைத்து துறைகளிலும் புதிதாக ஒருங்கிணைந்த படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதற்கேற்ப, பேராசிரியா் பணியிடங்களை உயா்த்தியிருக்க வேண்டும். ஆனால், இப்போது பழைய நிா்ணயிக்கப்பட்ட இடங்களையும் குறைப்பது எஞ்சியிருக்கும் பேராசிரியா்களுக்கு வேலைப் பளுவை அதிகரிக்கும் என்பதுடன், கல்வித் தரமும் பாதிக்கப்படும். அதுமட்டுமின்றி பல்கலைக்கழகத்தின் ‘நாக்’ அங்கீகாரமும் பாதிக்கப்படும் என்றனா். இதுகுறித்து பல்கலைக்கழக உயா் அதிகாரி ஒருவா் கூறுகையில், வேலைப்பளு குறைவாக உள்ள தமிழ் உள்ளிட்ட ஒருசில துறைகளில் மட்டுமே அனுமதிக்கப்பட்ட பேராசிரியா் இடங்களை குறைத்து, வேறு பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பியுள்ளோம். பல்கலைக்கழகத்தின் நிதி நெருக்கடியைச் சமாளிக்கவே இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றாா்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews