5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு: தமிழகத்தில் நடப்பது அதிமுக அரசு அல்ல - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, November 02, 2019

Comments:0

5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு: தமிழகத்தில் நடப்பது அதிமுக அரசு அல்ல

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிவிப்புக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத் திருத்தங்களின்படி 5, 8-ம் வகுப்புக்கு நடப்பு கல்வியாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும். முதல் 3 ஆண்டுகளுக்கு மட்டும் மாணவர்கள் தேர்ச்சி நிறுத்தி வைக்கப்படாது என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது. எனினும்,தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படாததால் பல்வேறு குழப்பங்கள் நிலவின. இந்நிலையில், சமீபத்தில் 5, 8-ம் வகுப்புகளுக்கு முப்பருவக்கல்வி முறையிலேயே பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தொடக்கக்கல்வித் துறை அறிவித்துள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் கல்வித்துறை வகுத்துள்ளது. இந்த அறிவிப்புக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசு தேசிய கல்விக்கொள்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிடும் முன்பே, முந்திக்கொண்டு 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளிலும் பொதுத்தேர்வு என்று அறிவித்திருப்பதால் தான், தமிழகத்தில் நடப்பது அதிமுக அரசு அல்ல; பாஜக அரசு என்கிறோம். தமிழக மக்களின் நலனைப் பாதிக்கும் எந்தத் திட்டத்தை மத்திய பாஜக அரசு கொண்டு வந்தாலும், அதை ஆதரிக்கும் அதிமுக ஆட்சி தான், இன்றைக்கு தமிழக மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்தாக மாறி இருக்கிறது," என பதிவிட்டுள்ளார். தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு அதிகாரப்பூா்வமாக வெளியிடும் முன்பே 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தோ்வு என்று தமிழக அரசு அறிவித்திருப்பது ஏன் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளாா். இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் சுட்டுரையில் கூறியிருப்பது: தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு அதிகாரப்பூா்வமாக வெளியிடும் முன்பே, முந்திக்கொண்டு 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளிலும் பொதுத்தோ்வு என்று அறிவித்திருப்பதால்தான், தமிழகத்தில் நடப்பது அதிமுக அரசு அல்ல, பாஜக அரசு என்கிறோம். தமிழக மக்களின் நலனைப் பாதிக்கும் எந்தத் திட்டத்தை மத்திய பாஜக அரசு கொண்டு வந்தாலும், அதை ஆதரிக்கும் அதிமுக ஆட்சிதான், இன்றைக்கு தமிழக மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்தாக மாறி இருக்கிறது என்று அவா் கூறியுள்ளாா்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews