TNPSC முடிவில் அரசு தலையிட முடியாது: முதல்வர் பழனிசாமி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, September 30, 2019

Comments:0

TNPSC முடிவில் அரசு தலையிட முடியாது: முதல்வர் பழனிசாமி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தன்னாட்சி அமைப்பான டிஎன்பிஎஸ்சி முடிவில் அரசு தலையிட முடியாது. குரூப் 2 தேர்வில் தமிழ் நீக்கம் விவகாரத்தில் அதன் அதிகாரத்திற்குட்பட்டு செயல்பட்டிருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சேலம் மாவட்டம் ஓமலூரில் நேற்று நடந்த சிறப்பு குறைதீர்க்கும் திட்ட முகாமில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: டிஎன்பிஎஸ்சி தன்னாட்சி பெற்ற அமைப்பாகும். குரூப் 2 தேர்வை நடத்துவதற்கான புதிய பாடத்திட்டத்தை அது அறிவித்துள்ளது. இதில், தமிழ் நீக்க விவகாரத்தில் அதன் அதிகாரத்திற்குட்பட்டு செயல்பட்டு இருக்கிறது. இந்த முடிவில் அரசு தலையிட முடியாது. பாஜ அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறது. அது தொடரும். ஐநா சபையில் பிரதமர் தமிழில் பேசியது மகிழ்ச்சியாக உள்ளது. இது தமிழர்களுக்கு கிடைத்த பெருமையாக கருதுகிறேன். நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக தமிழக காவல் துறைதான் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இது மத்திய அரசு நடத்தும் தேர்வு. இந்த தேர்வில் எந்தவித முறைகேடும் நடக்காமல் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் வீணாக கடலில் கலப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. நம்முடைய நிலப்பரப்பு சமமான பகுதியாகும். அரை அல்லது ஒரு டி.எம்.சி. அளவு தண்ணீர் சேமித்து வைக்க 500 கோடி ரூபாய் வரையிலும் செலவாகும். இதனால் நான்கு அல்லது ஐந்து இடங்களில் தண்ணீர் தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உபரிநீர், ஊருக்குள் சென்று விடாமல் இருக்கவும் பார்த்துக் கொள்ள வேண்டும். மேட்டூர் முதல் கொள்ளிடம் வரை தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
234 தொகுதியிலும் 5 லட்சம் பேருக்கு பென்ஷன் மேட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த சிறப்பு குறை தீர்க்கும் முகாமில், முதல்வர் கலந்து கொண்டு பேசுகையில், இதுவரை 5 சட்டப்பேரவை தொகுதிகளில் இதுபோன்ற குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு முகாமிலும் ஏராளமான பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து மனுக்களை வழங்கியுள்ளனர். இதில் பெரும்பாலும், ஓய்வூதியம் கேட்டு மனு கொடுத்துள்ளனர். அவர்களது கோரிக்கையை ஏற்று, 234 தொகுதியிலும் உள்ள 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நிலம், வீடு வாங்கியவர்கள் பெயர் மாற்றம் செய்ய இந்த முகாமில் மனு அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேட்டூர் நிகழ்ச்சியில் கடும் வெயிலில் காலையிலேயே ஏராளமான முதியோர்கள் காத்திருந்தனர். முதல்வர் 11 மணிக்குதான் அங்கு வந்தார். அதற்குள் 4 பேர் மயங்கி விழுந்தனர். அவர்களுக்கு உடனடியாக 108 ஆம்புலன்சில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழாவில் பேசிய முதல்வர், தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளில், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் 11.45 லட்சம் பயனாளிகளுக்கு, ₹3,956 கோடி நிதியுதவியும், ₹1,500 கோடி மதிப்பிலான 5,260.72 கிலோ தங்கமும் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews