👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
அண்ணா பல்கலைக்கழகத்தில் கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பில்லை என்று அப்பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா தெரிவித்துள்ளார்.
சென்னை, கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் கண்காட்சியை துணைவேந்தர் சுரப்பா தொடங்கி வைத்தார். கண்காட்சியில் பல்வேறு பதிப்பகங்களின் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.
உயர் கல்வி படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் கண்காட்சியில் ஏராளமான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் சுரப்பா.
அப்போது அவர் கூறும்போது, ''அண்ணா பல்கலைக்கழகம், அதன் நான்கு பிரிவுகளான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, எம்ஐடி மற்றும் அதன் 13 உறுப்புக் கல்லூரிகளில் இந்த ஆண்டு கல்விக் கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பில்லை'' என்றார் சுரப்பா.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U