இடிந்து விழும் நிலையில் அரசு பள்ளி கட்டிடம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 29, 2019

இடிந்து விழும் நிலையில் அரசு பள்ளி கட்டிடம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
காரிமங்கலம் அருகே நாகனம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியின் வகுப்பறை கட்டிடங்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் மாணவ, மாணவிகள் அச்சத்துடன் கல்வி கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே நாகனம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் நாகனம்பட்டி, கெரகோடஅள்ளி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 152 மாணவ, மாணவிகள் 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கின்றனர். இந்த பள்ளிக்கு 5 வகுப்பறைகள் மட்டுமே உள்ளன. இடப்பற்றாக்குறையால் ஒரே அறையில் பல வகுப்புகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக, வகுப்பறை கட்டிடத்தின் மேற்கூரையில் கான்கிரீட் பெயர்ந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. மேலும், ஜன்னல்களும் சேதமடைந்துள்ளது. கடந்த 2012ம் ஆண்டு இந்த கட்டிடம் சீரமைக்கப்பட்டது. ஆனாலும், மீண்டும் சேதம் அடைந்து வருகிறது. தற்போது மழைக்காலம் என்பதால், கட்டிடத்தின் விரிசல்களில் இருந்து மழைநீர் வகுப்பறைக்குள் விழுகிறது. சேதம் அடைந்த கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என, மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் பிடிஓ அலுவலகத்தில் பெற்றோர்கள் புகார் செய்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், எந்த நேரத்திலும் இடிந்து விழுந்து விடுமோ என்ற அச்சத்துடன் இங்கு மாணவர்கள் படித்து வருகின்றனர். அசம்பாவிதம் நிகழும் முன்பாக, இந்த கட்டிடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews