பிளஸ் 1, பிளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வுக்கு தட்கலில் விண்ணப்பிக்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, May 08, 2019

பிளஸ் 1, பிளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வுக்கு தட்கலில் விண்ணப்பிக்கலாம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
மார்ச் மாதம் நடந்த பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வில் விண்ணப்பிக்க தவறிய மாணவ, மாணவியர் தற்போது, சிறப்பு துணைத்தேர்வு எழுத தட்கல் என்ற சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க மேலும் ஒரு வாய்ப்பை அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. சிறப்பு துணைத் தேர்வு ஜூன் மாதம் நடக்க உள்ளது. இதற்காக, ஏப்ரல் 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அந்த தேதிவரை விண்ணப்பிக்க தவறியவர்கள் தற்போது தட்கல் என்னும் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் ஏப்ரல் 15ம் தேதி மற்றும் 16ம் தேதிகளில் விண்ணப்பிக்கவும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் பல மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க தவறினர். அதனால் அவர்கள் மீண்டும் ஒரு வாய்ப்பு கேட்டதின் பேரில் தற்போது தட்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இதன்படி அந்தந்த மாவட்டத்தில் உள்ள அரசுத் தேர்வுத்துறையின் சேவை மையங்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் (9 மற்றும் 10ம் தேதிகளில்) நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அதேபோல், கடந்த மார்ச் மாதம் நடந்த தேர்வில் பிளஸ் 1 அரியர்ஸ் வைத்த மாணவர்கள், பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் மே 3ம் தேதி முதல் 8ம் தேதி வரை பள்ளிகள் மற்றும் தேர்வு மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அந்த தேதிகளில் விண்ணப்பிக்க தவறியவர்கள் தட்கல் மூலம் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் 13ம் தேதி மற்றும் 14ம் தேதிகளில் தங்கள் விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews