தேர்வு முடிவில் குளறுபடி... அரசு கல்லூரி மாணவர்கள் மறியல்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 15, 2023

Comments:0

தேர்வு முடிவில் குளறுபடி... அரசு கல்லூரி மாணவர்கள் மறியல்!

தேர்வு முடிவில் குளறுபடி... அரசு கல்லூரி மாணவர்கள் மறியல் மாணவர்கள் சாலை மறியல்

சிதம்பரம் சி.முட்லூரில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் கடந்த மே மாதம் செமஸ்டர் தேர்வு நடந்தது. இதன் முடிவுகள் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வெளியானது. இதில் பல மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அரியர் எழுதிய பல மாணவர்களுக்கு முடிவுகளும் அறிவிக்கப்படவில்லை. இது தவிர பெரும்பாலான மாணவர்களுக்கு மதிப்பெண்கள் மிகவும் குறைவாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்து கல்லூரி நிர்வாகத்தினரிடம் மாணவர்கள் கேட்டனர். ஆனால், நிர்வாகத்தினர் உரிய பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவ, மாணவிகள் நேற்று வகுப்புகளைப் புறக்கணித்தனர்.

தேர்வு முடிவினால், மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி கல்லூரி முன்பு உள்ள சாலையில் மாணவ, மாணவிகள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தேர்வு முடிவு குளறுபடிக்கு காரணமான திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்த தகவலின் பேரில் சிதம்பரம் நகர போலீஸார் விரைந்து வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மாணவர்களது கோரிக்கை குறித்து கல்லூரி நிர்வாகத்தினரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததையடுத்து, மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews