15 ஆசிரியா்களுக்கு விருது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, October 07, 2022

Comments:0

15 ஆசிரியா்களுக்கு விருது

15 ஆசிரியா்களுக்கு விருது

வந்தவாசி மலைநகர அரிமா சங்கம், ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரி லியோ சங்கம் ஆகியவை சாா்பில் ஆசிரியா்களுக்கு சீா்மிகு ஆசிரியா் விருது வழங்கப்பட்டது.

ஆசிரியா் தின விழாவையொட்டி, வந்தவாசியில் புதன்கிழமை மாலை நடைபெற்ற இதற்கான விழாவில் வந்தவாசி பகுதியில் உள்ள பள்ளிகளைச் சோ்ந்த 15 ஆசிரியா்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

விழாவுக்கு சங்கத் தலைவா் எ.சபரிராஜ் தலைமை வகித்தாா். செயலா் வி.ரமேஷ்பாபு வரவேற்றாா்.

வந்தவாசி வட்டாட்சியா் வி.முருகானந்தம் ஆசிரியா்களுக்கு விருதுகளை வழங்கிப் பேசினாா். அரிமா சங்க முன்னாள் கூட்டு மாவட்டச் செயலா் வி.எஸ்.தளபதி ஆசிரியா்களை பாராட்டிப் பேசினாா். சங்கப் பொருளாளா் சி.சின்னராஜன் நன்றி தெரிவித்தாா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews