தனியார் பள்ளி தாளாளர் மீது ரூ 32 லட்சம் மோசடி புகார் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 25, 2022

Comments:0

தனியார் பள்ளி தாளாளர் மீது ரூ 32 லட்சம் மோசடி புகார்

வடபழனி, துரைசாமி சாலையை சேர்ந்தவர் சிவகுமார் சாது (52). ஸ்மார்ட் கிளாஸ் கல்வி பயிற்சி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கொளத்தூரில் ஒரு தனியார் பள்ளியுடன் ஒப்பந்தம் செய்து, ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பு மற்றும் பள்ளி மேம்பாட்டு பணிகளுக்கு ரூ 32 லட்சம் செலவு செய்துள்ளார். இந்த பணத்துக்கு சிவகுமார் சாதுவிடம் தனியார் பள்ளி நிர்வாகம் வழங்கிய காசோலைகள் வங்கியில் பணமின்றி திரும்பி வந்துள்ளன. இதையும் படிக்க | கற்றல் கற்பித்தலில் உள்ள சவால்களை தீர்க்க ஆசிரியர்கள் ஒவ்வொருவக்கொருவர் கலந்தாலோசனை செய்யவேண்டும் - மாவட்ட உதவி திட்ட அலுவலர்

இதுகுறித்து பள்ளி தாளாளர் சுகிர்தா வைஸ்லெட்டிடம் கடந்த சில நாட்களுக்கு முன் பணம் கேட்டதற்கு தரமுடியாது என மிரட்டியதாக சிவகுமார் சாது மாதவரம் நீதிமன்றத்தில் பள்ளி தாளாளர் ரூ 32 லட்சம் பணமோசடி செய்ததாக வழக்கு தொடர்ந்தார். சம்பந்தப்பட்ட பள்ளி தாளாளர்மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாதவரம் குற்றப்பிரிவு போலீசார் பணமோசடி வழக்குப்பதிவு செய்து, பள்ளி நிர்வாகத்திடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews