இல்லம் தேடிக் கல்வி - அனைத்து பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் 15.11.2021 திங்கட்கிழமை அன்று நடத்துதல் - சார்பு - முதன்மைக் கல்வி அலுவலர் செயல்முறைகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, November 13, 2021

Comments:0

இல்லம் தேடிக் கல்வி - அனைத்து பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் 15.11.2021 திங்கட்கிழமை அன்று நடத்துதல் - சார்பு - முதன்மைக் கல்வி அலுவலர் செயல்முறைகள்

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, ஈரோடு மாவட்டம் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்: 680/இ.தே.க/ஒபக/ஈரோடு/2021 நாள்:13.11.2021

பொருள் :

பார்வை:

ஒருங்கினைந்த பள்ளிக் கல்வி - இல்லம் தேடிக் கல்வி - அனைத்து பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்துதல் - சார்பு.

1. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை-600006, மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள், ந.க.எண்:449/C7/SS/2021 நாள்: - 10-2021 மற்றும் 10.11.2021 மேற்காண் பொருள் சார்ந்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி ஈரோடு மாவட்டம் இல்லம் தேடிக் கல்வித் திட்டம் சார்ந்து மாவட்ட மற்றும் ஒன்றிய அளவில் ஆசிரியர் பயிற்றுநர்கள் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இல்லம் தேடிக் கல்வித் திட்டம் மாவட்டத்தில் சிறப்புடன் நடைபெற மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் அமைக்கப்பட்டுள்ள பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் இல்லம் தேடிக் கல்வி திட்டம் சார்ந்து அதன் நோக்கங்கள் மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றி தெளிவு படுத்தப்பட வேண்டும். தன்னார்வலர்கள் பதிவு செய்யப்படாத குடியிருப்பு பகுதிகளில் தன்னார்வலர் பதிவிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

எனவே 15.11.2021 திங்கட்கிழமை அன்று மாலை 4.00 மணிக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை மற்றும் தொடக்கநிலை பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் கூட்டப்பட்டு அனைவருக்கும் இல்லம் தேடிக் கல்வித் திட்டம் தொடர்பாக அனைத்து விபரங்களையும் ஒன்றிய அளவில் பயிற்சி பெற்றுள்ள தலைமையாசிரியர்கள் மற்றும் உதவித் தலைமையாசிரியர்கள் மூலம் அறிவுறுத்த வேண்டும். என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews