பணியிட மாறுதல் தொடர்பாக, அமைச்சர் அலுவலகத்தை அணுக வேண்டாம்' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
தலைமைச் செயலகத்தில், அவரது அறை கதவில் ஒட்டப்பட்டுள்ள 'நோட்டீஸ்':முதல்வரின் அறிவுறுத்தலுக்கு இணங்க மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும்மருத்துவம் சார்ந்த பணியாளர்களின் பணியிட மாறுதல்கள் அனைத்தும், வெளிப்படையான கலந்தாய்வின் வழியே நடக்கின்றன. எனவே, பணியிட மாறுதல் தொடர்பாக, அமைச்சர் அலுவலகத்தை அணுக வேண்டாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Saturday, June 12, 2021
பணியிட மாறுதல் கேட்டு வராதீர்: அமைச்சர் அறிவிப்பு.
Subscribe to:
Post Comments (Atom)

Really informative authentic news that we felt sir
ReplyDelete