பள்ளி மாணவர்கள் திறன் அறிக்கை சமர்ப்பிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, May 01, 2021

Comments:0

பள்ளி மாணவர்கள் திறன் அறிக்கை சமர்ப்பிப்பு!

நடப்பு ஆண்டில் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ஏதும் நடக்காததால் அவர்களுக்கான திறன் அறிக்கையை சமர்ப்பிக்க இன்று இறுதி நாளாக ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
TNPSC - DEPARTMENTAL EXAMINATION MAY 2021 - APPLY ONLINE - Direct Link Click Here திறன் அறிக்கை:
நடப்பு கல்வி ஆண்டில் பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் பள்ளிக்கு ஒரு நாள் கூட வராத சூழலிலேயே முடிந்து விட்டது. நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலே இதற்கு காரணம். கடந்த 2020 மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று நம்மை அச்சுறுத்தி வருகிறது. இதனால் கடந்த கல்வி ஆண்டின் இறுதி தேர்வுகள் கூட நடத்தப்படாமல் பள்ளிகள் மூடப்பட்டது. நடப்பு கல்வி ஆண்டு வழக்கம் போல் தொடங்கப்படவில்லை.
ஊரடங்கு நீடித்த காரணத்தால் தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்தியது. அரசு பள்ளிகளில் இந்த வசதிகள் இல்லாத காரணத்தால் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படவில்லை. கர்நாடகா மாநிலத்தில் அரசு பள்ளி மாணவர்களின் திறன் அறிக்கையையே சமர்ப்பிக்க இன்று வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. ஆரம்ப பள்ளி மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்று அடுத்த வகுப்புகளுக்கு தேர்ச்சி பெற்று விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. TNPSC - DEPARTMENTAL EXAMINATION MAY 2021 - NOTIFICATION - PDF
இது குறித்து அரசு பள்ளி ஆசிரியர்கள், எங்கள் மாணவர்களின் தனி திறமையை அறிந்து தான் அளவீடு செய்கிறோம். மாணவர்களுடன் முடிந்த வரையில் தொடர்பில் இருந்து வருகிறோம். சில தனியார் பள்ளிகள் கடந்த ஆண்டு செயல்பாடுகளை வைத்து நடப்பு ஆண்டிற்கு மதிப்பெண் வழங்குகின்றனர். இதனால் அவர்கள் அறிக்கையை விரைவில் சமர்ப்பித்து விட்டனர். மாணவர்களின் திறன் அறிக்கையை சமர்ப்பிக்க கூடுதல் நாட்கள் வழங்கினால் நிதானமாக செயல்பட முடியும் என்று கூறுகின்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews