பிளஸ் 2 வகுப்பு 8ம் தேதி துவங்க பள்ளி கல்வித்துறை அனுமதி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, April 05, 2021

2 Comments

பிளஸ் 2 வகுப்பு 8ம் தேதி துவங்க பள்ளி கல்வித்துறை அனுமதி

பிளஸ் 2 மாணவர்களுக்கு, வரும் 8ம் தேதி முதல் வகுப்புகளை மீண்டும் நடத்த, பள்ளி கல்வித் துறை அனுமதி அளித்து உள்ளது. தபால் ஓட்டுப்பதிவு செய்யாதவர்களுக்கு 'சான்ஸே இல்லை!' மாவட்ட தேர்தல் அலுவலர் திட்டவட்டம்
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், மாநிலம் முழுதும் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பிளஸ் 2வுக்கு மட்டும், நேரடி வகுப்புகள் நடந்து வந்தன. தமிழக சட்டசபை தேர்தல் நாளை நடக்கும் நிலையில், பிளஸ் 2 மாணவர்களுக்கு நாளை மறுதினம் வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தல் முடிந்ததும், வரும் 8ம் தேதி முதல், மாணவர்களுக்கு மீண்டும் நேரடி வகுப்புகளை நடத்த, பள்ளிக் கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கு, மே 3ம் தேதி பொது தேர்வு துவங்க உள்ளதால், அதற்கு முன் மாணவர்களுக்கு இரண்டாவது ஆயத்த தேர்வுகளை நடத்தவும், ஆய்வக பயிற்சிக்கான செய்முறை தேர்வுகளை ஏப்ரலில் நடத்தி முடிக்கவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.

2 comments:

  1. My school 11th 12 portion naduthuranga yengalum school vara solraga naa la yena panrathu.but government 11th ku leave vittu irukanga

    ReplyDelete
  2. My school also no sanitaising and temparacher chakup pls take action

    Srijayam school

    Thandrampattu
    Kilravanthavadi also serch goole
    Thiruvannamalai

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews