Breaking

Friday, February 05, 2021

2020 - 2021 ஆம் கல்வியாண்டு - தமிழ்நாடு ஆசிரியர் பெற்றோர் கழகத்திற்கு செலுத்த வேண்டிய இணைப்பு கட்டணத் தொகை - 18.02.2021க்குள் செலுத்தக் கோருதல் – சார்பு - PROCEEDINGS

காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்
ந.க.எண்.363/ஆ2/2021 நாள். 04.02.2021
பொருள்
- பள்ளிக்கல்வி - காஞ்சிபுரம் மாவட்டம் - 2020 - 2021 ஆம் கல்வியாண்டு - தமிழ்நாடு ஆசிரியர் பெற்றோர் கழகத்திற்கு செலுத்த வேண்டிய இணைப்பு கட்டணத் தொகை - 18.02.2021க்குள் செலுத்தக் கோருதல் – சார்பு. பார்வை
சென்னை -06, தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம், செயலர் அவர்களின் கடித ந.க. எண்.029/அ/2021 நாள். 27.01.2021 பார்வையில் காணும் செயல்முறைகளின்படி, மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களை தலைவராகக் கொண்டு பள்ளிக் கல்வி இயக்ககத்தில் இயங்கிவரும் தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிகுலேசன் / மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளிகளிடமிருந்து 2020-2021 ஆம் ஆண்டிற்கு செலுத்தவேண்டிய இணைப்பு கட்டணம் மற்றும் செய்தி சந்தா தொகைகளை தங்கள் ஆளுகைக்குட்பட்ட மேற்காண் பள்ளிகளிடமிருந்து பெற்று 18.02.2021 க்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைத்திட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog