பள்ளிக் கல்வித் துறையில் (தொடக்கக் கல்வி உட்பட) பணிபுரியும் ஆசிரியரல்லாத
பணியாளர்களுக்கு கலையாசிரியராகப் பணிமாறுதல் வழங்கிட 20% ஒதுக்கீடு செய்து
பார்வை 1-ல் காணும் அரசாணைப்படி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
01.01.2021 நிலவரப்படி தகுதிவாய்ந்த ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்கள்
அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களிடமிருந்து வரப்பெற்றுத் தொகுத்து தற்காலிக
முன்னுரிமைப் பட்டியல் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி
வைக்கப்பட்டது.
திருத்தம் நீக்கம் சேர்க்கை விவரங்கள் கோரி - பெறப்பட்டு மீண்டும்
சரிபார்க்கப்பட்டு, ஒவ்வொரு பணி நிலையிலும் (காவலர் அலுவலக உதவியாளர்/ பதிவறை
எழுத்தர்/ஆய்வக உதவியாளர்/இளநிலை உதவியாளர், உதவியாளர்) தகுதி பெற்றுள்ள
பணியாளர்களில் கலையாசிரியராகப் பணி மாறுதல் பெறத் தகுதியுள்ள 34
பணியாளர்களின் இறுதி பெயர் பட்டியல் பார்வை 4-ல் காணும் 04.02.2021 நாளிட்ட
செயல்முறை வாயிலாக அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும்
அனுப்பிவைக்கப்பட்டது.
பணி மாறுதல் மூலம் கலையாசிரியராக இறுதிப் பெயர்பட்டியலில் இடம்பெற்றுள்ள
34) பணியாளர்களுக்கு நியமன ஒதுக்கீட்டு ஆணை கீழ்க்காணும் நாளில்
வழங்கப்படவுள்ளது
Friday, February 05, 2021
தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணி - ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு 20% இட ஒதுக்கீட்டின்படி பணிமாறுதல் மூலம் கலையாசிரியராக ஆணை வழங்குதல் 01.01.2021 அன்றைய நிலவரப்படி இறுதி பெயர் பட்டியல் அனுப்பப்பட்டது பணிமாறுதல் கலந்தாய்வு நடைபெறுதல் - சார்பாக - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின்(பணியாளர் தொகுதி) செயல்முறைகள் - நாள் : 05.02.2021
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.