அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை: உயர்கல்வித்துறை அறிக்கை கேட்டுள்ளதாக தகவல். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, December 16, 2020

Comments:0

அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை: உயர்கல்வித்துறை அறிக்கை கேட்டுள்ளதாக தகவல்.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட விவகாரம் குறித்து உயர்கல்வித்துறை அறிக்கை கேட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ஐ.ஐ.டி.யில் படிக்கும் மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கு காய்ச்சல் இருந்ததாகவும், அவர் உடனடியாக கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கும் விடுதி மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்றும் தகவல்கள் வெளியாகின. அதன்படி அண்ணா பல்கலைக்கழக விடுதி மாணவர்களுக்கு நேற்று கொரோனா பரிசோதனை தொடங்கியது. இதற்காக பெருநகர சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் அடங்கிய 4 குழுவினர் தீவிரமாக ஈடுபட்டனர். ஒவ்வொரு குழுவினரும் ஒவ்வொரு விடுதியில் மாணவ, மாணவிகளுக்கு பரிசோதனையை நேற்று காலை மேற்கொள்ள தொடங்கினர். மேலும், ஒரு விடுதியில் 100 மாணவர்கள் வீதம் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இதனையடுத்து, அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட விவகாரம் குறித்து உயர்கல்வித்துறை அறிக்கை கேட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலால் கல்லூரி வகுப்புகளை தள்ளி வைப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews