'அரசு பள்ளி மாணவருக்கு வழங்கப்பட்ட 7.5 சதவீதம் மருத்துவ இடஒதுக்கீட்டில் உதவிபெறும் பள்ளி மாணவர்களையும் இணைத்து 10 சதவீதமாக அதிகரிக்க வேண்டும்' என தமிழ்நாடு அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் அலுவலர் சங்கம் மாநில தலைவர் அமலராஜன் தெரிவித்தார்.
மதுரையில் அவர் கூறியதாவது: அரசு பள்ளிகளுக்கு வழங்கும் அனைத்து நலத்திட்டங்களும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் தமிழக அரசு வழங்குகிறது. நீட் தேர்வு கோச்சிங் மையங்களிலும் இப்பள்ளி மாணவர்கள் பயின்றனர். அந்த மையங்களில் உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் பெரும்பாலும் பாடங்கள் கற்பித்தனர். ஆனால் ஒதுக்கீட்டில் உதவி பெறும் பள்ளி மாணவர்களை தமிழக அரசு புறக்கணித்தது ஏமாற்றம் அளிக்கிறது.
எனவே தமிழக அரசு நிபுணர்கள் குழு அமைத்து ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களைப் போல் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ ஒதுக்கீட்டை 10 சதவீதமாக அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உதவிபெறும் பள்ளிகளிலும் இலவச ஆங்கில வழிக் கல்வியை வழங்க வேண்டும். ரத்து செய்யப்பட்ட ஆசிரியர்களின் உயர் கல்வி ஊக்க ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும் என்றார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.