மருத்துவ கல்லுாரி கட்டணம் கட்ட தவிக்கும் அரசு பள்ளி மாணவர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 25, 2020

Comments:0

மருத்துவ கல்லுாரி கட்டணம் கட்ட தவிக்கும் அரசு பள்ளி மாணவர்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
திருமங்கலம் அருகே மேலக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த வைரமுத்து மகன் முத்துக்குமார் பிளஸ் 2 தேர்வில் 495 மதிப்பெண் பெற்றார். நீட் தேர்வில் கட் ஆப் மதிப்பெண் 161 பெற்றுள்ளார். தமிழக அரசின் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் இவருக்கும் மருத்துவ கல்வி படிக்க வாய்ப்பு கிடைத்தது. நவ., 19 ல் நடந்த 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கலந்தாய்வில் பங்கேற்றார்.அரசு மருத்துவ கல்லுாரிகளில் இடம் கிடைக்காமல் தனியார் கல்லுாரிகளில் இடம் கிடைத்தது. தனியார் கல்லுாரி கலந்தாய்வில் கலந்து கொள்ள நுழைவு கட்டணம் ரூ.25 ஆயிரம் கட்ட முடியாததால் இவர் எந்த கல்லுாரியையும் தேர்ந்தெடுக்கவில்லை. தனியார் மருத்துவக்கல்லுாரிகளில் சேரும் மாணவர்களுக்கான கட்டணத்தை தமிழக அரசே செலுத்தும் என நவ., 20 ல் முதல்வர் பழனிசாமி அறிவித்தார். ஆனால் நவ., 19ல் மருத்துவ கலந்தாய்வில் கலந்த கொண்ட முத்துக்குமார் அரசின் உதவியை பெற முடியாத நிலையில் உள்ளார். கலந்தாய்வில் கலந்து கொள்ளாததால், கல்லுாரியில் இடம் கிடைக்காத நிலையும் உள்ளது. கலெக்டர் அன்பழகன் கூறுகையில், ''தமிழகம் முழுவதும் நவ., 19 கலந்தாய்வில் கலந்து கொண்ட மாணவர்கள் சிலர் கட்டணம் செலுத்த முடியாமல் திரும்பியுள்ளனர். அவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர்கள், முதன்மை கல்வி அலுவலர் மூலம் மருத்துவ கலந்தாய்விற்கென உள்ள தனி அதிகாரியை தொடர்பு கொண்டால், விரைந்து தீர்வு கிடைக்கும் என்றார். ஏழ்மை நிலையில் உள்ள தனக்கு அரசு உதவுமாறு முத்துக்குமார் கேட்டு கொண்டுள்ளார்.
தொடர்புக்கு 88702 88052முத்துக்குமார் 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews