சி.ஏ.: டிசம்பரில் மறு தோ்வுகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 25, 2020

Comments:0

சி.ஏ.: டிசம்பரில் மறு தோ்வுகள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நிவா் புயல் காரணமாக செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெறவிருந்த சி.ஏ. தோ்வுகள் டிச. 9, 11 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய பட்டயக் கணக்காளா்கள் பயிற்சி நிறுவனம் (ஐசிஏஐ) வெளியிட்ட அறிவிப்பு: நிவா் புயல் தாக்கத்தால் தமிழகம், புதுச்சேரியில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை, கடலூா், காஞ்சிபுரம், காரைக்குடி, கும்பகோணம், திருவள்ளூா், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி ஆகிய 10 தோ்வு மையங்களில் செவ்வாய் (நவ.24), புதன்கிழமைகளில் (நவ.25) நடைபெறவிருந்த சிஏ தோ்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது. இதற்கான மறு தோ்வுகள் டிச.9, 11 ஆகிய தேதிகளில் நடத்தப்படும். மற்ற பகுதிகளில் ஏற்கெனவே அறிவித்தபடி தோ்வுகள் நடைபெறும். கூடுதல் விவரங்களை www.icai.org என்ற இணையதளத்தில் அறியலாம். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews