’அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தாமாக முன்வந்து பதவி விலகவேண்டும்’.. கல்வியாளர்கள் வலியுறுத்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, November 14, 2020

Comments:0

’அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தாமாக முன்வந்து பதவி விலகவேண்டும்’.. கல்வியாளர்கள் வலியுறுத்தல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது மோசடி குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், அவர் தார்மீக அடிப்படையில் தாமாக முன்வந்து பதவி விலக வேண்டும் என்றும் கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது மோசடி குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், அவர் தார்மீக அடிப்படையில் தாமாக முன்வந்து பதவி விலக வேண்டும் என்றும் கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என சூரப்பா தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது எழுந்த புகார்கள் தொடர்பாக, விசாரணை மேற்கொள்வதற்கு, ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு ஒன்றை தமிழக அரசு நியமித்துள்ளது. புகார்களின் உண்மைத் தன்மையை அறிந்து இக்குழு அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று அதிமுக தெரிவித்துள்ளது. மேலும், துணைவேந்தர் சூரப்பா மீதான மோசடி புகார் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு, உண்மையை உலகறிகச் செய்ய வேண்டும் என்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சபாபதி மோகனும் கல்வியாளர்களும் வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில், யார் மீது புகார்கள் எழுந்தாலும் அதன் உண்மைத் தன்மையை அறிய, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஆனால், எதிர்க்கட்சிகளின் அழுத்தம் காரணமாகவே தமிழக அரசு குழு அமைத்துள்ளதாக திமுக தெரிவித்துள்ளது. இதனிடையே, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா, தன் மீதான புகார்களில் எந்த உண்மையும் இல்லை என்றும், தமிழக அரசு விசாரணைக்குழு அமைத்தது ஆச்சரியம் அளிக்கிறது எனவும் கூறினார். மேலும், பணியிட மாற்றம் தொடர்பான உத்தரவுகளுக்கு தனக்கு மிரட்டல்கள் வருவதாக சூரப்பா தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு அடிபணியாததால் தன் மீது அவதூறு பரப்பும் வகையில் வீண் பழி சுமத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார். அதே வேளையில், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார் குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனியார் பொறியியல் கல்லூரிகளின் ஆசிரியர்கள் சங்கங்கமும் வலியுறுத்தியுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews