நீட் தேர்வை எழுதாத மாணவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்க முடியாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, September 12, 2020

நீட் தேர்வை எழுதாத மாணவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்க முடியாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
வரும் 13ம் தேதி நீட் தேர்வை எழுத முடியாத மாணவர்களுக்கு, மறுவாய்ப்பு வழங்க தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட், நாடு முழுவதும் நாளை நடைபெற உள்ளது. இதை தேர்வை ரத்து செய்யக் கோரியும், ஒத்திவைக்க கோரியும் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. குறிப்பாக, நீட் தேர்வை நடத்த அனுமதித்து பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி, 7 மாநில அரசுகள் தொடர்ந்த வழக்களையும் நிராகரித்தது. இதையடுத்து, ஏற்கனவே திட்டமிட்டப்படி நாடு முழுவதும் நீட் தேர்வு நாளை நடத்தப்படுகிறது. இந்நிலையில், நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமைக்கு எதிராக வட மாநிலத்தை சேர்ந்த ஆஷிஷ் மகேந்திரா என்பவர் புதிய ரிட் மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், ‘வரும் 13ம் தேதி நீட் தேர்வை எழுத முடியாத மாணவர்களுக்கு, மறுவாய்ப்பு வழங்கும்படி தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட வேண்டும்,’ என அதில் கூறப்பட்டு இருந்தது. நீதிபதிகள் அசோக் பூஷன், சுபாஷ் ரெட்டி மற்றும் எம்.ஆர்.ஷாஅமர்வில் நேற்று இந்த மனு அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘கொரோனோ வைரஸ் பரவலின் ஆபத்தை அடிப்படையாக கொண்டு, 13ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும். அப்படி இல்லை என்றால், தற்போதைய சூழலில் இத்தேர்வில் கலந்து கொள்ள முடியாத மாணவர்களுக்கு, வேறு தேதியில் தேர்வு எழுத அனுமதி வழங்கும்படி தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட வேண்டும்,’ என்று வாதிட்டார். ஆனால், இந்த மனுவை நிராகரித்த நீதிபதிகள், ‘‘நீட் தேர்வு தொடர்பாக ஏற்கனவே தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இதில், மீண்டும் வாதங்களை முன்வைக்க ஏதுமில்லை என்பதால், மனுதாரரின் அனைத்து கோரிக்கைகளும் நிராகரிக்கப்படுகின்றன. மேலும், நாடு முழுவதும் ஒரே விதமான கேள்விகளை அடிப்படையாக கொண்டு நீட் தேர்வு நடத்தப்படுவதால், தற்போது தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மட்டும் எப்படி மறுதேதி வழங்க முடியும்? அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை,’’ என்று உத்தரவிட்டனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews