தொலைதுார கல்வியில் சட்டப் படிப்பு தடை கோரிய வழக்கில் 'நோட்டீஸ்' - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, September 05, 2020

தொலைதுார கல்வியில் சட்டப் படிப்பு தடை கோரிய வழக்கில் 'நோட்டீஸ்'

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தொலைதுார கல்வி வாயிலாக, சட்டப் படிப்புகளில் மாணவர்களை சேர்க்க, அண்ணாமலை பல்கலைக்கு தடை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு பதில் அளிக்க, மத்திய, மாநில அரசுகளுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்செந்துாரை சேர்ந்த, வழக்கறிஞர் பி.ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனு:சிதம்பரம் அண்ணாமலை பல்கலை வெளியிட்டுள்ள விளம்பரத்தில், தொலைதுார கல்வி வாயிலாக, இரண்டாண்டு மற்றும் மூன்றாண்டு சட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. இது, வழக்கறிஞர் சட்டத்துக்கு எதிரானது. சட்டக் கல்வி விதிகளில், தபால் வழியில் சட்டப் படிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலை பல்கலை அறிவித்துள்ள சட்டப் படிப்பில் தேர்ச்சி பெறுபவர்கள், வழக்கறிஞராக பணியாற்ற முடியாது.பல்கலை வெளியிட்ட விளம்பரத்தில், இந்த சட்டப் படிப்பை முடிப்பவர்கள், வழக்கறிஞராக பதிவு செய்ய தகுதியில்லை என்பதை தெரிவிக்கவில்லை. எனவே, இரண்டு ஆண்டு மற்றும் மூன்றாண்டு சட்டப் படிப்பில் மாணவர்களை சேர்க்க, அண்ணாமலை பல்கலைக்கு தடை விதிக்க வேண்டும். தொலைதுார கல்வியில் சட்டப் படிப்பு நடத்த, அனுமதி அளிக்கக் கூடாது என பார் கவுன்சிலுக்கு உத்தரவிட வேண்டும். ஏற்கனவே வழங்கப்பட்ட சான்றிதழ்களை திரும்ப பெற, உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதில் அளிக்க, மத்திய, மாநில அரசுகள், பார் கவுன்சில் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews